ஜீவாவிடம் கோவித்துக் கொள்ளும் மீனா, பெயர் சூட்டு விழாவில் நடக்க இருக்கும் பிரச்சனை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
ஜீவாவிடம் கோவித்துக் கொள்ளும் மீனா, பெயர் சூட்டு விழாவில் நடக்க இருக்கும் பிரச்சனை - இன்றைய
ஜீவாவிடம் கோவித்துக் கொள்ளும் மீனா, பெயர் சூட்டு விழாவில் நடக்க இருக்கும் பிரச்சனை - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
ஜீவாவிடம் கோவித்துக் கொள்ளும் மீனா, பெயர் சூட்டு விழாவில் நடக்க இருக்கும் பிரச்சனை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி தனத்தின் அம்மா உடன் மீனாவிற்கு பிரச்சனை எதுவும் இருக்கிறதா என கேட்க, தனம் பொய் சொல்லி சமாளிக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா வந்து உட்கார தனத்தின் அம்மா எழுந்து போகிறார். அதை பார்த்த மூர்த்தி என்னாச்சு ஏதாவது பிரச்சனையா என கேட்கிறார். உடனே மீனா இப்போ தனம் நம்மை மாட்டிவிட போகிறார் என நினைக்க ஆனால் தனம் தொட்டில் விழாவை பெரிசாக கொண்டாடவில்லை என அம்மாவிற்கு வருத்தமாக இருக்கிறது அதற்கு மீனா ஆதரவாக இருந்தார் என சொல்லி சமாளிக்க, உடனே முல்லை பார்த்தீங்களா அக்கா பேசவே இல்லை என மீனாவிடம் சொல்கிறார்.

சௌந்தர்யாவிடம் சிக்கிக் கொண்ட பாக்கியா, அப்பா பாசத்திற்கு ஏங்கும் லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

பின் ஜீவா கணக்கு பார்த்துக் கொண்டிருக்க, மீனா பிரச்சனையை பற்றி சொல்கிறார். தனம் நம்ம புள்ளையை ஒரு மாதிரி அவங்க புள்ளையை வேற மாதிரி பார்க்கிறார். இதை அவரிடம் கேட்டுவிடாமலே என்று தான் இருக்கிறது என சொல்கிறார். பின் அப்படி எல்லாம் அண்ணியிடம் பேசாதே என சொல்ல, மீனா என்னை எல்லாரும் எது சொன்னாலும் உனக்கு பிரச்சனை இல்லை என கோவித்துக் கொள்கிறார். பின் முல்லை கதிரிடம் எல்லாம் சொல்கிறார்.

உடனே கதிர் இனிமேல் நீ சாப்பாடு கொண்டு வர வேண்டாம் என சொல்ல, ஏன் என முல்லை கேட்கிறார். நான் வந்து வீட்டில் சாப்பிடுகிறேன் எதுவும் பிரச்சனை இல்லை என சொல்கிறார். நீ வீட்டில் இருந்து மீனாவிற்கு உதவி செய் என சொல்லி இருவரும் கொஞ்சிக் கொள்கின்றனர். மறுநாள் பெயர் வைக்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்ய, தனத்தின் அம்மா எதோ நினைத்துக் கொண்டு வருகிறார். அப்போது மீனா பரம்பரை தொட்டில் மேலே இருக்கிறது. அதில் தான் எல்லா குழந்தைகளையும் படுக்க வைக்க வேண்டும் என சொல்ல, என் பேரன் எதற்கு பழைய தொட்டிலில் படுக்க வேண்டும்.

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 3) பள்ளிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!

என் பையன் சந்தன தொட்டில் செய்து கொண்டு வருவான் என சொல்லி உள்ளே செல்கிறார். பின் மீனா ஜீவாவை முறைத்து பார்க்க, நம்ம புள்ளையை பழைய தொட்டில் மற்றும் பழைய நடவண்டியில் தான கொடுத்தீங்க. நீங்க புது தொட்டிலில் படுக்க வைப்பது சரி தான் ஆனால் கயலை ஏன் இப்படி எதுவும் பண்ணவிடாமல் செய்தீர்கள் என சொல்கிறார். பழைய தொட்டில் இருந்தால் தூக்கி போட வேண்டியது தான என கதிர் சொல்ல, கயலை அதில் தான் போட வேண்டும் என அத்தை சண்டை போட்டார்கள் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!