பொங்கலுக்கு ஊருக்கு போக திட்டமிடும் ராமமூர்த்தி, வர மறுக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
பொங்கலுக்கு ஊருக்கு போக திட்டமிடும் ராமமூர்த்தி, வர மறுக்கும் கோபி - இன்றைய
பொங்கலுக்கு ஊருக்கு போக திட்டமிடும் ராமமூர்த்தி, வர மறுக்கும் கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
பொங்கலுக்கு ஊருக்கு போக திட்டமிடும் ராமமூர்த்தி, வர மறுக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், தாத்தாவிடம் எழில் அப்பா பற்றி எனக்கு தெரியும் என பேசுகிறார். பின் குடும்பத்தினர் பொங்கல் பண்டிகையை ஊரில் கொண்டாட இருக்கின்றனர். பின் ராதிகாவின் குடும்பத்தினர் அதே போல ஒரு வேலை ஒன்றை சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் அப்பா பற்றி இந்த குடும்பத்தில் எனக்கு மட்டுமே தெரியும் என நினைத்ததாக சொல்கிறார். ஆனால் அப்பா என்னிடம் இனிமேல் இப்படி நடந்து கொள்ளமாட்டேன் என சொன்னதாக சொல்கிறார். ஆனால் அவர் மீண்டும் அப்படி நடந்து கொண்டான். அதனால் நான் கண்டித்தேன் என சொல்ல, எழில் எதுவும் பெரிய பிரச்சனை இல்லையே என கேட்கிறார். இல்லை என சொல்ல, அந்த நேரம் இனியா வருகிறார். எனக்கு பொங்கலுக்கு வேலை இருக்கிறது என செல்ல, தாத்தா எழிலை சொல்கிறார்.

மறுநாள் அனைவரும் அமர்ந்திருக்க பொங்கலுக்கு வீட்டை பெயிண்ட் அடிக்க வேண்டும் என சொல்ல, நானும் நினைத்து கொண்டே இருக்கிறேன் ஆனால் முடியவில்லை என சொல்கிறார். எழில் என் பட வேலைகள் முடிந்ததும் நானே செய்கிறேன் எப்படி பெயிண்ட் அடிக்க வேண்டும் என சொல்லுங்கள் என சொல்கிறார். கோபி அதெல்லாம் வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்ல, ஜெனி பெயிண்ட் அடிக்க என்ன வேண்டும் என கேளுங்க என சொல்லுங்கள், செழியன் எல்லாத்தையும் பார்த்துக் கொள்வான் என்று மாட்டி விடுகிறார்.

கண்ணனை வேலை சொல்லும் தனம், கோவப்பட்ட ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

செழியன் எனக்கு வேலை இருக்கிறது என சொல்ல, அதெல்லாம் பெரிய வேலை இல்லை அதனால் பார்த்துக் கொள்வான் என சொல்கிறார். அப்போது ராமமூர்த்தி பொங்கலுக்கு நம்ம சொந்த ஊருக்கு போவோம் என சொல்ல, செழியன் 4 நாட்கள் எனக்கு வேலை இருக்கும் என சொல்கிறார். அதெல்லாம் வேலை இருக்காது என சொல்ல, கோபி எனக்கும் வேலை இருக்கிறது என சொல்கிறார். நான் எத்தனை நாள் பொங்கல் கொண்டாடபோகிறேன் என தெரியவில்லை. அதனால் வர வேண்டும் என சொல்கிறார்.

கோபி ராதிகா வீட்டிற்கு வர. பொங்கலுக்கு என்ன பிளான் என கேட்கிறார். என் அலுவலகத்தில் இருந்து டூர் போகிறோம் என சொல்ல அப்படியா என ராதிகா சொல்கிறார். ராதிகா அம்மா பொங்கலுக்கு நம்ம ஊருக்கு போறோம் என சொல்ல,திருநெல்வேலி தான் எங்க ஊரு என சொல்கிறார். மயூரா போவோம் என சொல்ல, கோபி இந்த காலை வைத்து கொண்டு வேண்டாம் என சொல்கிறார். அப்போது மயூரா என்னை கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என கேட்க, சரி என கோபி சொல்கிறார்.

பாரதி உடன் வாழ்ந்த பழைய வாழ்க்கையை சொல்லி வருத்தப்படும் கண்ணம்மா, வித்தியாசமாக நடந்து கொள்ளும் வெண்பா – இன்றைய எபிசோட்!

பின் தாத்தா சொன்னதை நினைத்து ஈஸ்வரி வருத்தப்படுகிறார். பாக்கியாவை அனுப்பி ஏன் அப்படி சொன்னார் என கேட்க, சொல்கிறார். பாக்கியா சென்று பேச, ஏன் மாமா இப்படி சொன்னீங்க என கேட்கிறார். அதெல்லாம் இல்லை என ராமமூர்த்தி சொல்ல, உண்மையாகவே ஒரு பிரச்சனை இல்லையே என பாக்கியா கேட்கிறார். அப்போ அத்தை மீது சத்தியம் செய்து சொல்லுங்கள் என சொல்ல, ராமமூர்த்தி சத்தியமாக ஒரு பிரச்சனையும் இல்லை என சொல்கிறார்.

எழில் தாத்தாவிற்கு உண்மையாகவே எந்த பிரச்சனையும் இல்லை என சொல்ல, நான் வேண்டும் மருத்துவமனைக்கு கூட்டிக் கொண்டு செல்லவா என கேட்கிறார். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என பாக்கியா சொல்கிறார். நீண்ட நாள் கழித்து எழில் வர, அமிர்தாவின் அம்மா அப்பா வந்து உள்ளே வர சொல்கிறார். அப்போது எழில் இங்கே வரலாமா வேண்டாமா என எனக்கு தெரியவில்லை என்று சொல்கிறார். ஏன் இங்கே வர என்ன என எழிலிடம் அமிர்தா அப்பா கேட்க, இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!