தமிழகத்தில் ஜனவரி 11 முதல் முழு ஊரடங்கு நீட்டிப்பு, இ-பாஸ் அமல்? முதல்வர் இன்று ஆலோசனை!

0
தமிழகத்தில் ஜனவரி 11 முதல் முழு ஊரடங்கு நீட்டிப்பு, இ-பாஸ் அமல்? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் ஜனவரி 11 முதல் முழு ஊரடங்கு நீட்டிப்பு, இ-பாஸ் அமல்? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் ஜனவரி 11 முதல் முழு ஊரடங்கு நீட்டிப்பு, இ-பாஸ் அமல்? முதல்வர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் தற்போது இரவு நேர ஊரடங்குடன் கூடிய கூடுதல் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையில் இ பாஸ் நடைமுறை உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் இன்று (ஜன.10) முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார்.

முழு ஊரடங்கு

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் தொற்று எதிர்பார்த்ததை விட அதி வேகமாக பரவி கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தினசரி பாதிப்பு ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் பரவலை கட்டுப்படுத்தும் படியாக மாநிலங்கள் தோறும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி முடக்கம் என பல்வேறு கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் தமிழகத்திலும் கொரோனா தினசரி பாதிப்பு 10,000 தாண்டி இருப்பதால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய அரசு, வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இது தவிர திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு அனுமதி, திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு அனுமதி, கடற்கரை பகுதிகளில் பொது மக்களுக்கு தடை உள்ளிட்ட சில அத்தியாவசியமற்ற செயல்பாடுகளுக்கும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

பொங்கலுக்கு ஊருக்கு போக திட்டமிடும் ராமமூர்த்தி, வர மறுக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இந்த ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்றுடன் (ஜன.10) முடிவுக்கு வரும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று (ஜன.10) முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார். அந்த வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர், மருத்துவக்கல்வி இயக்குனர் மற்றும் முக்கிய அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூத்த அண்ணன் மூர்த்தி யார் தெரியுமா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

இப்போது தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால், பேருந்து நிலையங்கள், சந்தைகள், கடை வீதிகளில் அதிகளவு மக்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவலின் வேகம் அதிகரிக்க கூடும் என்பதால் நாளை (ஜன.11) முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் இனி சனி மற்றும் ஞாயிறு என இரு தினங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

குறிப்பாக நீண்ட தூர பேருந்து போக்குவரத்து சில நாட்களுக்கு நிறுத்தப்படலாம் என்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல மீண்டும் இ பாஸ் முறை கொண்டு வரப்படலாம் என்றும் தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அந்த வகையில் மேற்கூறிய கட்டுப்பாடுகளை செயல்படுத்துவது குறித்து இன்று (ஜன.10) நடைபெற இருக்கும் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக நேற்று (ஜன.9) ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு பணியாளர்களுக்கு சில முக்கியமான அறிவுரைகளை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!