தொழிலை நிறுத்த சொல்லும் கோபி, வருத்தத்துடன் முடிவெடுத்த பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
தொழிலை நிறுத்த சொல்லும் கோபி, வருத்தத்துடன் முடிவெடுத்த பாக்கியா - இன்றைய
தொழிலை நிறுத்த சொல்லும் கோபி, வருத்தத்துடன் முடிவெடுத்த பாக்கியா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
தொழிலை நிறுத்த சொல்லும் கோபி, வருத்தத்துடன் முடிவெடுத்த பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா மீண்டும் தொழிலை தொடங்கியதை தெரிந்து கொண்ட கோபி பாக்கியாவிடம் சத்தம் போடுகிறார். பின் பேசமாட்டேன் உன் கையால் சாப்பிடமாட்டேன் என சொல்ல பாக்கியாவிற்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறது. அதனால் அவர் தொழிலை கைவிட முடிவு செய்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வர ஜெனி தாத்தாவிற்கு சாப்பாடு எல்லாம் கொடுத்துவிடுகிறார். அப்போது பாக்கியா இது என்ன பை என கேட்க அது வந்து அத்தை என சொல்ல தொடங்கும் போது எழில் வருகிறார். பின் பாக்கியா யாரும் ஆர்டர் வாங்கவில்லை என சொல்ல எழில் என்ன ஆச்சு என கேட்கிறார். அப்போது செல்வி வர அக்கா சாப்பாடு போலவே மசாலா பொடிகளை கூட யாரும் வாங்கவில்லை என சொல்கிறார். அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பேப்பரில் செய்தி வந்ததால் எல்லாரும் வாங்க பயப்படுவதாக சொல்கிறார்கள் என சொல்ல எழில் விடு பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் அனைவரும் சாப்பிட அமர கோபியும் அங்கே இருக்கிறார். அப்போது பாக்கியாவிடம் செல்வி கிளம்புவதாக சொல்ல நாளை ஆபிஸ் வந்துவிடுகிறேன் என சொல்கிறார். பாக்கியாவும் சரி என சொல்ல கோபி எந்த ஆபிஸ் என கேக்கிறார். பாக்கியா எதுவும் சொல்லாமல் இருக்க நான் அவ்வளவு சொல்லியும் கூட நீ தொழிலை செய்ய தொடங்கிவிட்டாய் என கோபி சத்தம் போடுகிறார். பின் எழில் பேச வர அவனை பேசவிடாமல் கோபி செய்கிறார். பின் பாக்கியா எப்படி திடீரென நிறுத்தமுடியும் என கேட்க நான் சொல்வதை கேட்காமல் இருப்பதால் இனிமேல் என்னிடம் நீ பேசாதே என கோபி சொல்கிறார்.

என்னை மதிக்காமல் இருந்தால் அப்படியே இருந்துகொள் என்னிடம் வந்து எதுவும் சொல்லாதே என சொல்லிவிட்டு சாப்பிடாமல் செல்கிறார். ஈஸ்வரி இவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என தெரியாமல் இருக்கிறார். பின் பாக்கியா அனைவர்க்கும் காபி கொடுக்க ஆனால் கோபி வேண்டாம் என சொல்கிறார். ஏன் என பாக்கியா கேட்க நான் உன்னிடம் என்ன சொன்னேன் பேசாதே என சொன்னேன் இனிமேல் உன் கையால் சாப்பிட கூட மாட்டேன் என சொல்லிவிட்டு கோவமாக செல்கிறார். இனியா அதை கேட்டு அப்பா சொல்வதை கேள் என சொல்கிறார்.

முல்லையை கவனமாக கவனித்து கொள்ளும் கதிர், கதிரை நினைத்து பெருமைப்படும் தனம் – இன்றைய எபிசோட்!

என்னுடைய பள்ளியில் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து தான் சாப்பிடுவோம் ஆனால் நீ செய்ய பிரச்சனையால் யாரும் என்னுடன் சாப்பிடவில்லை 2 நாட்களாக நான் தனியாக தான் சாப்பிட்டேன் என சொல்கிறார். பாக்கியா அதை நினைத்து வருத்தப்பட செழியனும் இவ்வளவு பிரச்சனைக்கு பின்னர் கூட எனக்கு தொழில் முக்கியம் என எப்படி சொல்ல முடிகிறது என கேட்கிறார். பின் பாக்கியா தொழிலை மூட முடிவு செய்கிறார். கண்ணீருடன் அனைத்து பொருள்களையும் எடுத்து வைக்க செல்வியும் உடன் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!