முல்லையை கவனமாக கவனித்து கொள்ளும் கதிர், கதிரை நினைத்து பெருமைப்படும் தனம் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லைக்கு டிரீட்மென்ட் செய்து இருப்பதால் கதிர் அவரை அக்கறையுடன் பார்த்துக் கொள்கிறார். அதை பார்த்து தனம் சந்தோசப்படுகிறார். கதிருக்கு திருமணம் செய்தால் பொண்டாடியை இப்படி எல்லாம் பார்த்துக் கொள்வான் என நினைக்கவே இல்லை என சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு பாத்ரூம் வருவதாக சொல்ல கதிர் கதவை எல்லாம் திறந்து வைத்துவிட்டு வர சொல்கிறார். அப்போது முல்லை நடக்க தொடங்க ஆனால் கதிர் நடக்கவிடாமல் தூக்கி செல்கிறார். தனம் எழுந்து பார்க்க முல்லை கதிர் ரூமில் லைட் எரிவதாக சொல்கிறார். பின் கதிர் தூக்கி கொண்டு போவதை பார்த்து சந்தோசப்படுகிறார். மூர்த்தியிடம் இது பற்றி சொல்ல நானும் உன்னையும் பாண்டியனையும் தூக்கி கொண்டு போகவா என சொல்லி சிரிக்கிறார். கதிரை நினைத்து தனம் பெருமைப்படுகிறார். மறுநாள் கதிர் பாத்ரூம் வாசலில் நடந்து கொண்டே இருக்கிறார்.
TN Job “FB Group” Join Now
அப்போது மீனா வந்து இவர் எதற்கு காலையில் இப்படி வாக்கிங் போகிறார் என நினைக்க அப்போது ஐஸ்வர்யாவும் தனமும் மீனா நிற்பதை பார்க்கிறார்கள். என்ன ஆச்சு என கேட்க இவர் எதற்கு இங்கே நடந்து கொண்டிருக்கிறார் என மீனா கேட்கிறார். பாத்ரூமில் யாரவது இருப்பார்கள் அதனால் இருக்கலாம் என தனம் சொல்ல இல்ல அக்கா எதோ நடக்குறது என மீனா தொடர்ந்து பார்க்கிறார். அப்போது பாத்ரூமில் இருந்து முல்லை வருகிறார். முல்லை பல்லு விலக்கும் வரை கதிர் நின்று கொண்டிருக்கிறார் என மீனா கண்டுபிடிக்கிறார். அப்போது ஜீவா வர இங்கே எல்லாரும் என்ன செய்கிறீர்கள் என கேட்கிறார். மீனா ஜீவாவிடம் கதிரை பார்க்க சொல்ல, கதிர் முல்லைக்கு தண்ணீர் எடுத்து கொடுத்து குளிக்க வைக்கிறேன் என சொல்கிறார்.
ஆனால் முல்லை நான் கவனமாக பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். குடும்பத்தில் அனைவரும் கதிர் சொன்னதை நினைத்து சிரிக்கின்றனர். மீனா எனக்கும் உடம்பு சரியில்லாமல் இருந்தால் நீ என்னை பார்த்துக் கொள்வாயா என கேட்க உனக்கு எல்லாம் எதுவும் ஆகாது வேண்டும் என்றால் எனக்கு முடியாமல் போனால் நீ பாரு என சொல்கிறார். பின் கதிர் முல்லைக்கு தலைசீவி விட்டு போட்டு வைத்துவிடுகிறார். அப்போது தனம் சாப்பாடு கொண்டு வர அதுக்குள்ள சாப்பிடவா என முல்லை கேட்கிறார். இப்போது சாப்பிட்டால் தான மாத்திரை போட சரியாக இருக்கும் என தனம் சொல்கிறார்.
கண்ணம்மாவிற்கு போன் செய்து வருத்தப்பட்ட ஹேமா, வெண்பாவிற்கு கண்டிஷன் போட்ட ஷர்மிளா – இன்றைய எபிசோட்!
பின் கதிர் வாங்கி சாப்பாடை ஓட்டி விடுகிறார். கதிர் முல்லையிடம் சொல்லிவிட்டு கடைக்கு கிளம்புகிறார். வெளியே வந்து தனம் ஜீவாவிடம் நான் கடைக்கு கிளம்புகிறேன் என சொல்ல, கதிரை பார்த்து மீனா இப்போ எல்லாம் கதிருக்கு பொறுப்பு வந்துவிட்டதாக சொல்கிறார். அப்போது ஜீவா அவனுக்கு எப்போதும் பொறுப்பு இருக்கிறது என சொல்கிறார். பின் தனம் ஜீவாவிடம் கதிர் இப்படி எல்லாம் பொண்டாட்டியை கவனித்து கொள்வான் என நான் நினைக்கவே இல்லை என சொல்கிறார். ஐஸ்வர்யாவும் கதிர் மாமாவை எல்லாரும் முரடன் என சொல்வார்கள் ஆனால் இப்படி இருப்பார் என எதிர்பார்க்கவே இல்லை என சொல்கிறார். பின் ஜீவா நம்ம வீட்டில் பாத்ரூம் தான் பிரச்சனை அதனால் தான் முல்லை கஷ்டப்படுவதாக சொல்கிறார். ஜீவா சொன்னதை கேட்டு மீனா கோவப்பட ஜீவா அவரிடம் இருந்து எஸ்கேப் ஆகிறார்.