தியேட்டரில் வெளியாகும் எழில் படம், வருத்தப்படும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா நீயும் அப்பாவும் பிரிந்தால் நான் அப்பா உடன் தான் இருப்பேன் என சொல்கிறார். பின் எழில் எடுத்த படம் திரையரங்கில் வர குடும்பத்துடன் பார்க்க வர சொல்கின்றார். அப்போது எழில் தயவு செய்து படம் பார்க்க வராதீங்க என சொல்கிறார். அதை கேட்டு கோபி வருத்தப்படுகிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா பாக்கியாவை கிண்டல் செய்வது போல பேச நீயும் அப்பாவும் பிரிந்துவிட்டால் நான் அப்பா உடன் தான் இருப்பேன் என சொல்கிறார். அப்போது பாக்கியா கோவப்பட இனிமேல் இப்படி நடக்க கூடாது என பாக்கியா நினைக்கிறார். பின் கோபி வெளியே செல்ல எழில் கோபியை இடிப்பது போல வருகிறார். பாக்கியா சாமி கும்பிட எழில் வந்து தன்னுடைய பட வேலைகள் முடிந்துவிட்டது. திரையரங்கில் படம் வர போகிறது என சொல்கிறார். குடும்பத்துடன் வந்து பார்க்கலாம் என சொல்ல பாக்கியா அதை நினைத்து சந்தோசப்படுகிறார்.
TN Job “FB
Group” Join Now
பின் பாக்கியா கேசரி கிண்டி எல்லாருக்கும் கொடுத்து சந்தோசப்படுகிறார். அப்போது கோபி வர பாக்கியா ஒரு சந்தோஷமான விஷயம் என சொல்லி கேசரி கொடுக்கிறார். கேசரி கொடுப்பது தான் சந்தோசமா அதான் தினமும் செய்கிறாய் அப்பறம் என்ன என சொல்லி கிண்டல் செய்ய இனியா சிரிக்கிறார். பாக்கியா கோபி பேசியதை நினைத்து வருத்தப்படுகிறார். பின் எழில் கோபி பேசியதை நினைத்து கோவமாக இருக்கிறார். பாக்கியா என்ன இவர் இப்படி இருக்கிறார் என கேட்க, அப்பாவிடம் நீ சொல்லவில்லையா என கேட்க இல்லை என சொல்கிறார்.
அப்போது இல்லை என எழில் சொல்ல, நீ போய் அவரிடம் சொல்லு என பாக்கியா சொல்கிறார். கோபி ரூமிற்கு எழில் வர கோபியிடம் பட வேலைகள் முடிந்துள்ளது. என் படம் தியேட்டரில் வர போகிறது என சொல்கிறார். ஆனால் நீங்க படம் பார்க்க வந்துவிடாதீங்க இப்போ கூட அம்மா உங்களிடம் சொல்லிவிட்டு வர சொன்னார் ஆனால் நீங்க இப்படி பேசுகிறீங்க என சொல்கிறார். கோபி நீ படம் எடுத்ததை நினைத்து நான் சந்தோசம் தான் படுவேன் என சொல்கிறார். இந்த டயலாக் எல்லாம் வேண்டாம் என கோபியை சொல்கிறார்.
பின் ராதிகா வீட்டில் மயூராவுடன் கோபி விளையாடி கொண்டிருக்க, எழில் பேசியதை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது கோபியிடம் ராதிகா ஏன் சோகமாக இருக்கீங்க என கேட்க, அப்போது கோபி என் மகன் வாழ்க்கையில் நாளை முக்கியமான நாள் ஆனால் அதில் நான் கலந்து கொள்ள முடியாது. எல்லாத்துக்கும் என் மனைவி தான் காரணம். சாப்பாடு போட்டால் மட்டும் எல்லாம் நடந்துவிடுமா அப்பா நான் இல்லாமல் எப்படி முடியும் என சொல்லி வருத்தப்படுகிறார்.