பரவி வரும் புதிய வகை வைரஸ் தொற்று – தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்?
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிற்கு பிறகு கொரோனா வைரஸ் தொற்றுகள் அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
மீண்டும் முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா முதல் மற்றும் 2ம் அலை பரவலின் காரணமாக எழுந்த பாதிப்புகளினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. பாதிப்புகள் நிலையை பொறுத்து படிப்படியாக கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. சமீபத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா 3ம் அலை தமிழ்கத்தில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியது. அப்போது கொரோனா வைரஸின் உருமாறிய வகை ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகமாக உறுதி செய்யப்பட்டு வந்தது.
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – தினசரி நடைபெறும் சேவைகளின் விபரம்!
இதனால் ஜனவரி மாதத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் பாதிப்புகள் குறைந்து விட்ட காரணத்தால் தேதி அறிவிக்கப்படாமல் இருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. நோய் தொற்றின் பாதிப்புகள் அச்சம் முழுமையாக நீங்கிய காரணத்தால் தேர்தல் ஆணையம் பிரச்சாரங்கள் மற்றும் கூட்டங்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.
தேர்தலுக்குப் பிறகு ஊரடங்கு விதிக்கப்படும் என்பது தவறான தகவல் என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றது. தேர்தல் சமயத்தில் விதிமுறைகள் மீறப்பட்டு தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயரும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புகள் உள்ளதே தவிர மீண்டும் முழு ஊரடங்கு விதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ள புதிய விதிகளின் படி கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட மட்டுமே வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும், BA.2 கொரோனா எனப்படும் ஸ்டெல்த் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.