தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விருதுகள் – ஜூலை 1 முதல் பதிவு!
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் நடப்பு கல்வியாண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகளை வழங்குவதற்காக தகுதியான பள்ளி மாணவர்களின் விண்ணப்பங்களை பள்ளிக்கல்வித்துறை வரவேற்றுள்ளது.
விருதுகள் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆய்வை வளர்க்கும் நோக்கத்தோடு நேரடி அறிவியல் கண்காட்சிகளை அரசாங்கம் நடத்தி வருகிறது. இதில் சிறப்பாக செயலாற்றுபவர்களுக்கு புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுகள் ஆண்டு தோறும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுகளுக்கான புதிய பதிவுகள் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் துவங்கி இருக்கும் நிலையில், இதற்காக தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் விருதுக்கு தகுதியான மாணவர்களின் பெயர்களை www.inspireawards-dst.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என்று அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதன்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இந்த விருதுகளை பெறுவதற்காக பதிவு செய்யலாம். இதில் உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பில் இருந்து ஒரு மாணவர், நடுநிலை வகுப்பில் இருந்து ஒருவர் என மூன்று பேர் மற்றும் பதிவு வகுப்புக்கு ஒருவர் என 5 பேரை பதிவு செய்ய முடியும்.
தமிழகத்தில் பக்ரீத் திருநாளிற்கு அடுத்தும் (ஜூலை 11) விடுமுறை? வலுக்கும் கோரிக்கை!
ஆனால், கூடுதலாக பதிவு செய்யப்படும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் விண்ணப்பங்களை செலுத்தும் செயல்முறையின் போது கடவுச்சொல் மறந்துவிட்டால் Forget Password ஆப்ஷனின் கீழ் கடவுச்சொல்லை புதுப்பித்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் User ID மறந்துவிட்டால் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை செலுத்தலாம்.
இப்போது தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் பழைய மாவட்டத்தை மாற்றி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். தவிர வங்கிக் கணக்கு எண்கள் அந்தந்த மாணவர்களின் பெயரில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதே நேரம் விண்ணப்பத்தில் வங்கியின் பெயர், IFSC Code, கணக்கு எண் ஆகியவை பிழையில்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.