ஆக.7 வங்கக்கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை – வானிலை மையம் எச்சரிக்கை!
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, தமிழகம் உள்ளிட்ட பலமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை:
தென்மேற்கு பருவமழை காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாகவே விடாமல் கனமழை பெய்து வருகிறது. கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைப்பொழிவு இருந்து வருகிறது. பெரும்பாலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
Exams Daily Mobile App Download
அதே போல, இன்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், கனமழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால், ஆற்று பகுதிகளில் வசித்து வரும் மக்கள் ஆற்றிற்கு குளிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கான முக்கிய அறிவுரை – உணவுத்துறை அமைச்சர் உத்தரவு
இந்நிலையில், வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தம் உண்டாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்தத்தினால் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தம் மறைந்ததும் ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்கு பிறகு கனமழை படிப்படியாக குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.