தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கான முக்கிய அறிவுரை – உணவுத்துறை அமைச்சர் உத்தரவு!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் வசதி படைத்தவர்கள், முக்கிய பிரமுகர்கள் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குகிறார்களா என்பதை விசாரணை செய்து கள அலுவலர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார்.
ரேஷன் கடைகள்:
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சக்கரை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரேஷன் கடைகளில் தரமான பொருள்கள் வழங்கப்பட வேண்டும் என அடிக்கடி அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னையில் கடந்த 2ஆம் தேதி உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், உணவுப்பொருள் வழங்கல்துறை ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர், ஆகியோர் கலந்து கொண்டு மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்கள்.
Exams Daily Mobile App Download
அதில் வசதி படைத்தவர்கள், முக்கிய பிரமுகர்கள் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குகிறார்களா என்பதை விசாரணை செய்து கள அலுவலர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் எடை சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். அது மட்டுமில்லாமல் கடை விற்பனையாளர்களிடம் முறைகேடு கண்டறியப்படும்போது, தொகையை திரும்ப செலுத்தினாலும் அவர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழக விளையாட்டு வீரர்களுக்கு இரு மடங்காகும் ஓய்வூதியம் – அரசாணை வெளியீடு
அரசு மருத்துவமனைகள் மூலம் விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு கடைகளுக்கு வெள்ளை அடித்தல், மின் சாதனங்கள் பழுது, தேவையான தளவாடப் பொருட்கள் மற்றும் சிறிய பழுது ஆகியவற்றை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊட்டி டீ, அரசு உப்பு, காதி பொருட்கள், பனை வெல்லம் ஆகியவற்றை அந்தந்த மாதமே கொள்முதல் செய்து விற்க நடவடிக்கை எடுப்பதுடன், மாதாமாதம் விற்பனையை அதிகரிக்க வேண்டும்.
மேலும் மழைக்காலங்களில் மூட்டைகளை தரையில் வைக்காமல், மரப்பலகையிலான கட்டைகளைப் பயன்படுத்தி அதன் மீது வைக்க வேண்டும். மேலும் 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளை பிரிப்பதற்கான முன்மொழிவை அனுப்பி வைக்க வேண்டும். விற்பனையாளர்கள் உணவு கடத்தலில் ஈடுபடும் போது அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இணையவழி பிரச்சினைகள், விற்பனை முனைய இயந்திரப் பழுது தொடர்பாக, உரிய பதிவேட்டில் பதிவு செய்து, உடன் பழுது நீக்கம் செய்ய வேண்டும்.
மேலும் அத்தியாவசியப் பொருட்கள் பெற வரும் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து பொருட்கள் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் சிறப்பாக பணியாற்றி வரும் விற்பனையாளர்களுக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் பரிசுகள் வழங்கப்பட வேண்டும். அது மட்டுமில்லாமல் விற்பனையாளர்களுக்கான நிதிப்பயன்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட இருக்கின்றன.