தமிழகத்தில் பள்ளி & கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 5ல் உள்ளூர் விடுமுறை – இதற்காக தான்!
பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. மேலும், அடுத்து வருகிற இரண்டாம் சனிக்கிழமையை குறித்தும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கோவில்களில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் கொண்டாடுவது பாரம்பரிய ஒன்றாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாக்களின் போது ஊரே வண்ண வண்ண தோரணைகளால் ஜகஜோதியாக ஜொலிக்கும். அப்பேற்பட்ட திருவிழாக்களை முன்னிட்டு விழாவை மேலும் சிறப்பிக்கவும், மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையிலும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் புதிதாக சுற்றுலா விருதுகள் அறிமுகம் – அரசு அறிவிப்பு!
அவ்விதமாக தூத்துக்குடியில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி வரை நடைபெறும். இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி விழா நடந்தது. ஆனால் நடப்பு ஆண்டில் கோவிலில் அனைத்து நிகழ்ச்சிகளும் வழக்கம் போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 440-வது ஆண்டு பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Exams Daily Mobile App Download
அதன்படி, தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 440-வது ஆண்டு திருவிழா இன்று பிஷப் ஸ்டீபன் தலைமையில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து காலை 6. 45 மணிக்கு ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை பிஷப் ஸ்டீபன் அந்தோணி ஏற்றி வைத்தார். அதன் பிறகு மதியம் 12 தூய பனிமய மாதா அன்னைக்கு பொன் மகுடம் சூட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ள இந்த திருவிழாவில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. மேலும்,திருவிழாவையொட்டி 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் பனிமய மாதா பேராலய திருவிழாவை ஒட்டி வருகிற ஆகஸ்ட் 5-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் 5ம் தேதி விடுமுறைக்கு பதில் 13. 08. 2022 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.