ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி சனிக்கிழமை பணி நாள் என்றும் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் தமிழ் மாதங்களில் ஒன்றான ஆடி மாதம் மிக சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோவில் தளங்களில் பல்வேறு வழிப்பாடுகளும், பூஜைகளும் நடத்தப்படும். இந்த மாதம் பெண் தெய்வங்களுக்கான மாதம் என்றும் புராணங்கள் கூறுகிறது. ஆடி மாதம் 18வது நாள் ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் அழைக்கப்படுகிறது. இன்றைய தினம் புனித நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆடி 18ம் பெருக்கு அன்று தமிழ் மக்கள் ஆறுகளை வணங்கி புனித நீராடுவார்கள்.
தமிழக மீனவர் சங்கத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!
இந்த சடங்கு முறைகள் காலம் காலமாக தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஆடி பெருக்கன்று நாம் என்ன செய்தாலும் அது பல மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை. இந்த நன்னாளில் மக்கள் ஆறுகளில் நீராடி இறைவனை வணங்குவர். ஆனால் கடந்த வருடம் கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் ஆற்றில் நீராட அனுமதிக்கப்படவில்லை. அதனால் காவேரி, வைகை, தாமிரபரணி போன்ற ஆறுகள் இந்த புனித நாளன்று மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தில் திரையரங்குகள், பள்ளிகள் திறக்க அனுமதி? முதல்வர் இன்று ஆலோசனை!
அதே போல் இந்த வருடமும் கொரோனா தாக்கம் உள்ளது. இருப்பினும் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி சனிக்கிழமை பணி நாள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று விரைவாக பரவுவதால் மக்கள் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி ஆடிப்பெருக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.