தமிழகத்தில் திரையரங்குகள், பள்ளிகள் திறக்க அனுமதி? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் முழு ஊரடங்கு நாளையுடன் (ஜூலை 31) முடிவடைவதால், அதற்கு மேல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் திரையரங்குகள், பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஊரடங்கு நீட்டிப்பு:
கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி நாடு முழுவதும் தீவிரமடைந்து வந்த கொரோனா 2 ஆம் அலை காரணமாக தமிழகம் உட்பட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. அந்த வகையில் வழக்கமான பொது முடக்கத்தை போல அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்துக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தமிழகத்திலும் கடந்த மே மாதத்தில் உச்சமடைந்து வந்த கொரோனா தொற்றால் தினசரி 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் ஊரடங்கு மற்றும் தடுப்பூசி மூலமாக நோய் தொற்றானது மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதி – மாநில அரசு நடவடிக்கை!
இதனால் தமிழகம் முழுவதும் தற்பொழுது ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு பல வகையான சேவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு, ஜூலை 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பள்ளிகள், திரையரங்குகள், சுற்றுலா தலங்கள் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. தவிர மற்ற அனைத்து சேவைகளும், கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருகிறது. இதனிடையே தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா புதிய பாதிப்புகள் திடீரென அதிகரித்துள்ளதால் அங்கு மீண்டும் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள படி, ஜூலை 30 ஆம் தேதியுடன் தற்போதுள்ள முழு ஊரடங்கு முடிவடையவுள்ளதால், ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின், தலைமை செயலர், சுகாதார செயலர் உட்பட பல உயர்மட்ட அதிகாரிகளுடன் இன்று (ஜூலை 30) ஆலோசனை செய்து வருகிறார். இதையடுத்து தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டால் திரையரங்குகள், பள்ளிகள் மீண்டுமாக திறக்க அனுமதி கொடுக்கப்படலாம் எனவும், இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.