மாநிலத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி விடுமுறை கிடையாது? அரசு அதிரடி அறிவிப்பு!

0
மாநிலத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி விடுமுறை கிடையாது? அரசு அதிரடி அறிவிப்பு!
மாநிலத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி விடுமுறை கிடையாது? அரசு அதிரடி அறிவிப்பு!
மாநிலத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி விடுமுறை கிடையாது? அரசு அதிரடி அறிவிப்பு!

மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் வழக்கம்போல் ஆகஸ்ட் 15ஆம் தேதி செயல்படும், அதுமட்டுமின்றி சுதந்திர தினத்தன்று அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடப்படாது என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

விடுமுறை இல்லை:

வரும் ஆகஸ்ட் 15 2022 இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவிற்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது. நம் முன்னோர்கள் பலர் பல தியாகங்கள் செய்து கிடைத்த இந்த சுதந்திர தினம் வருடம்தோரும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அனைத்து பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம் ஆகும். இந்நிலையில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று முதல் முறையாக, பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள் என எதற்கும் விடுமுறை கிடையாது என்று அறிவித்து உள்ளது உத்தரபிரதேச மாநில அரசு.

Exams Daily Mobile App Download

உத்திர பிரதேச மாநிலத்தில் கடந்த 75 ஆண்டுகளில் இப்படி நடப்பது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு வெளியிட்ட அறிவிப்பு ஒன்று அனைவரையும் ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. அவர் வெளியிட்ட அறிவிப்பில், சுதந்திர தினத்தின் 75 வது ஆண்டு என்பதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த ஆண்டு சுதந்திர தினம் சிறப்பு நிகழ்ச்சியாக கொண்டாடப்படும், தீபாவளி பண்டிகையின் போது செய்வது போல் சிறப்பு சுகாதார இயக்கம் மேற்கொள்ளப்படும் என்றும், இதை தேசிய பொது இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் டி.எஸ்.மிஸ்ரா கூறியுள்ளார்.

தமிழக அரசில் இன்டெர்வியூ மூலம் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.20000/-

மேலும் சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் தொடர்புடைய இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். சுதந்திர தின வாரத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். மேலும் சுதந்திர தின விழாவை வெறும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல், மக்கள் அதில் பங்கேற்க வேண்டும். இதையடுத்து அனைத்து சமூக அமைப்புகள், பொதுப் பிரதிநிதிகள், என்சிசி மற்றும் என்எஸ்ஓ கேடட்கள், வர்த்தக அமைப்புகள் போன்ற துறைகள் இணைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!