விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலின் வெற்றிக்கு காரணம் இவர்கள் தான் – குவியும் பாராட்டுக்கள்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் இல்லத்தரசியின் கதை என்றாலும் அதில் வரும் இரண்டு ஆண் கதாபாத்திரங்கள் தான் சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கின்றனர்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் பெண்களை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளதால் பல குடும்ப ரசிகர்களை கொண்டுள்ளது. இந்த சீரியலில் பாக்கியாவை சுற்றியே கதை இருக்காமல் அவரது கோபி காதலி உடன் பழகுவது, இரண்டாவது மகன் திருமணம் முடிந்து கணவனை இழந்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பது என பல கதைகளுடன் இருப்பது கூட சீரியலின் சிறப்பாக இருக்கிறது. பாக்கியா படிக்காத பெண்ணாக இருந்தாலும் தனது குடும்பத்திற்காக எல்லாத்தையும் விட்டு இருக்கிறார்.
ஆனால் தன்னுடைய ஆசையை தற்போது சிறிது சிறிதாக முயற்சி செய்து செய்திருக்கிறார். அவர் கணவர் பற்றிய உண்மையை தெரிந்த பாக்கியாவின் அப்பா தன்னுடைய மகன் என்று பார்க்காமல் மருமகளுக்கு ஆதரவாக பேசுவது எல்லாம் புதுமையாக இருக்கிறது. பாக்கியா நல்ல மனைவி, மருமகள், அம்மா மட்டும் அல்லாமல் மூத்த மகனின் மனைவிக்கு நல்ல மாமியாராக இருக்கிறார். பாக்கியா தான் சிறந்தவர் என அவருக்கு ஆதரவாக பலரும், கோபியை பிடிக்காமல் திட்டி தீர்க்கும் பலரும் இருக்கின்றனர்.
“பிக்பாஸ்” வீட்டில் இருந்து வெளியேறி அபிநய் வெளியிட்ட முதல் பதிவு – ரசிகர்களுக்கு நன்றி!
மேலும் எழில் அமிர்தாவிற்கு திருமணம் முடிந்து குழந்தை இருப்பது தெரிந்து பின் அவரது காதலை சொல்ல, அதை அமிர்தா நிராகரித்தாலும் குடும்பத்தினரிடம் வெளிப்படையாக சொன்னது எல்லாம் இப்படியும் ஆண்கள் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இந்த மூன்று கதாபாத்திரங்களும் தான் சீரியலின் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கிறது. 2 வெவ்வேறு ஆண் கதாபாத்திரங்களை வைத்து இல்லத்தரசிகளின் கதையை முன்னிலைப்படுத்தி இயக்குனர் சீரியலை வெற்றி பாதைக்கு கொண்டு செல்வது பாராட்டத்தக்கது.