EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – தற்போது வரை அமலாகி உள்ள மாற்றங்கள்!

0
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - தற்போது வரை அமலாகி உள்ள மாற்றங்கள்!
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - தற்போது வரை அமலாகி உள்ள மாற்றங்கள்!
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – தற்போது வரை அமலாகி உள்ள மாற்றங்கள்!

கடந்த சில மாதங்களாக ஊழியர் வைப்பு நிதி ஆணையம் PF கணக்கில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதனை PF கணக்கு வைத்திருக்கும் அனைவரும் அடுத்த ஆண்டு பின்பற்ற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

ஊழியர் வைப்பு நிதி ஆணையம்

இந்தியாவில் மாத சம்பளம் வாங்குபவர் மற்றும் தொழிலாளர்கள் தனக்கான சம்பளத்தில் ஒரு பகுதியை வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய திட்டத்திற்காக தொழிலாளர் வைப்பு நிதியை கொண்டுள்ளார்கள். இவ்வாறு சேமிக்கப்படும் நிதியானது அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வு ஊதியமாகவோ அல்லது மொத்தமாகவோ அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது ஊழியர் வைப்பு நிதி ஆணையம் PF கணக்கில் பல்வேறு மாற்றங்களையும் வழிமுறைகளையும் கொண்டு வந்துள்ளது. அவைகளை பற்றி விரிவாக பார்க்கலாம். முதலாவதாக PF கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பது கடந்த மாதம் 30-ஆம் தேதியில் இருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – பரிசோதனை தீவிரம்!

அவ்வாறு இணைக்கவில்லை என்றால் PF கணக்கில் கிடைக்கும் நன்மைகள் கிடைக்காது. அத்துடன் நிறுவனம் வழங்கும் PF பங்களிப்பும் தங்கள் PF கணக்கில் வழங்கப்படாது. அடுத்ததாக PF கணக்கில் நாமினியை நியமிக்க வருகிற 31-ஆம் தேதிக்குள் நியமிக்க வேண்டும். ஏனெனில் ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்தால் இந்த நிதி யாருக்கு கொடுக்க பட வேண்டும் என்று பிரச்சனைகள் ஏற்படும். அதனால் இந்த PF நிதி யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட வேண்டும். இவ்வாறு குறிப்பிடவில்லை என்றால் PF கணக்கில் பெறப்படும் பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படாது.

TNPSC தேர்வெழுத உள்ளோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் மாற்றம் குறித்த முழு விபரங்கள் இதோ!

இதற்கு அடுத்ததாக EDLI என்ற ஊழியர்கள் டெபாசிட் இணைப்பு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இழப்புத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் PF கணக்கில் வைத்திருப்பவர் பணியில் இருக்கும் போது இறந்து போனால் அவருடைய நாமினி அல்லது வாரிசுக்கு ரூ.7 லட்ச வரை இழப்பு தொகையாக வழங்கப்படும். இதற்காக பிரீமியம் தொகை செலுத்த தேவையில்லை. அடுத்ததாக ஊழியர் ஒருவர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக PF கணக்குக்கு ஒதுக்கினால் அவர்கள் தங்கள் கணக்கை இரண்டு PF கணக்குக்காக தனித்தனியாக பராமரித்துக் கொள்ளலாம் என்று சென்ட்ரல் போர்டு ஆஃப் டைரக்ட் டாக்சஸ் (CBDT) அறிவித்துள்ளது. இவ்வாறு PF கணக்கு வைத்திருப்பவர்கள் வைப்பு நிதியை பெறுவதற்கு EPFO-ல் அறிவிக்கப்படும் மாற்றங்களை பின்பற்ற வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!