ஜனவரி 10 முதல் 15 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 3 முதல் 8ம் தேதி வரை கோடை விடுமுறையை அளிக்க வேண்டும் என ஆசிரியர் கூட்டமைப்பு அரசிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது.
பள்ளி விடுமுறை
இந்தியாவில் உள்ள முக்கிய குளிர் பிரதேசங்களில் ஒன்றான ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் வித்தியாசமான வருகை முறையை பின்பற்றி வருகின்றன. அந்த வகையில் இம்மாநிலத்தில் உள்ள பள்ளிகள் கோடை காலத்தில் முழு நேரமும் செயல்பட்டு, குளிர் காலத்தில் பள்ளிகள் இயங்கும் நேரங்களில் சில மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். அதன் படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் அளிக்கப்படும் பள்ளி விடுமுறையை மாற்றி அமைக்கும் படி அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது.
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – தற்போது வரை அமலாகி உள்ள மாற்றங்கள்!
அதாவது, பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 10 முதல் 15 வரை விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் உள்ள விடுமுறையை ரத்து செய்து லோஹ்ரி பண்டிகையின் போது கூடுதலாக ஜனவரி 3 முதல் 8 வரையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் கூட்டமைப்பு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் கல்வியில் இடையூறு ஏற்பட்டுள்ளதால் இந்த விடுமுறை நாட்களை லோஹ்ரி விழாவுடன் இணைக்க வேண்டும் என்று மாநில ஊடகத் தலைவர் ஷஷி சர்மா வலியுறுத்தியுள்ளார்.
பள்ளி மாணவர்கள் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – பரிசோதனை தீவிரம்!
இதற்கிடையில் அகில இந்திய தேசிய கல்வி சம்மேளனத்தின் செயலாளர் பவன் மிஸ்ரா மற்றும் ஹிமாச்சல் பிரதேச ஆசிரியர் கூட்டமைப்பு மாநில தலைவர் பவன் குமார், தற்போது பள்ளிகளில் கற்கும் சூழல் மிக சிறப்பாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். என்றாலும் கடந்த டிச.21ம் தேதி வெளியிடப்பட்ட விடுமுறை அட்டவணையை மாற்றி ஜனவரி 10 முதல் 15 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.