இரவு நேரத்தில் ரயில் பயணம் செய்யும் பயணிகளின் கவனத்திற்கு – புதிய மாற்றங்கள்!
இந்தியாவில் நம்மில் பெரும்பாலானோர் ரயிலில் பயணம் மேற்கொள்ளவே விரும்புவார்கள். தற்போது இரவு நேரத்தில் பயணம் மேற்கொள்ளும் போது பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக புகார்கள் கிடைத்துள்ளன. அதனால் இரவு நேரத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரயில்வே வாரியம் சில விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.
பயணிகள் கவனத்திற்கு
இந்தியாவில் பொது போக்குவரத்தில் சாதாரண மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது ரயில் போக்குவரத்து ஆகும். இதில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் தங்களின் இருப்பிடம், அலுவலகம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதனால் கொரோனா கால கட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அந்த வகையில் முதலில் முன்பதிவில்லா சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டது. ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள்.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து கொண்டே வருவதால் ரயில்வே வாரியம் பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது நீண்ட நேரமாக இரவு நேரத்தில் பயணம் மேற்கொள்ளும் போது பயணிகளுக்கு ஏராளமான இடையூறுகள் ஏற்படுவதாகவும் அதனால் பயணிகள் தங்களுக்கு அசௌகரியமாக இருப்பதாகவும் புகார்கள் பெறப்பட்டுள்ளது. அதனால் இதனை தடுக்கும் வகையில் ரயில்வே வாரியம் சில புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு பள்ளிகள் முழு அடைப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! இதற்காக தான்?
தற்போது இந்த புதிய விதிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம். இதில் முதலாவதாக ரயில்களில் இரவு நேரங்களில் பயணிகள் நிம்மதியாக தூங்குவதற்கு சத்தமாக பேசக்கூடாது என்றும் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரவு 10 மணிக்கு பிறகு பயணிகள் லைட் ஆஃப் செய்ய வேண்டும். இதனை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியன் ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் பயணிகள் தங்களுக்கு அசௌகரியமாக இருப்பதாக புகார் கொடுத்தாலும் ரயில்வே போலீசார், டிக்கெட் பரிசோதகர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.