அடுத்த 2 நாட்களுக்கு பள்ளிகள் முழு அடைப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! இதற்காக தான்?

0
அடுத்த 2 நாட்களுக்கு பள்ளிகள் முழு அடைப்பு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! இதற்காக தான்?
அடுத்த 2 நாட்களுக்கு பள்ளிகள் முழு அடைப்பு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! இதற்காக தான்?
அடுத்த 2 நாட்களுக்கு பள்ளிகள் முழு அடைப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! இதற்காக தான்?

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளும் அடுத்த 2 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பள்ளிகள் மூடல்

மே 2ம் தேதியன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற ஈத் பண்டிகையின் போது இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. அதாவது, ஜோத்பூரில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் ஈத் பாண்டியை முன்னிட்டு தங்களது கொடிகளை ஏற்ற, பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு அங்கு ஏற்றியிருந்த காவி கொடி காணாமல் போனதாக கூறி பிற சமூகத்தினர் குற்றம் சாட்டியதால் இந்த மோதல் ஏற்பட்டது. இப்போது இந்த வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக ஜோத்பூரின் 10 பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

இந்த நிலையில் ஜோத்பூர் வன்முறையினால் ஊரடங்குச் சட்டம் அமலில் உள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து விதமான பள்ளிகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட பகுதிக்குள் வரும் அனைத்து பள்ளிகளும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடப்படும். வாரியத் தேர்வுகள் நடைபெறும் பள்ளிகள் மட்டுமே திறந்திருக்கும். தேர்வு எழுதப்போகும் மாணவர்களின் பரீட்சை அனுமதி அட்டை, ஊரடங்கு உத்தரவு இயக்கத்தின் அனுமதியாக செயல்படும்’ என்று ஜோத்பூரின் டிஎம் ஹிமான்ஷு குப்தா கூறியுள்ளார்.

Exams Daily Mobile App Download

இப்போது, மே 2ம் தேதியன்று ஜோத்பூரில் நடந்த மோதலுக்குப் பிறகு, போலீசார் அப்பகுதியில் லத்தி சார்ஜ் செய்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இப்போது இந்த வன்முறை எதிரொலியாக, ஜோத்பூரில் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவு எல்லைக்குள் வரும் பள்ளிகள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த கட்டுப்பாடுகள் இன்றும், நாளையும் (மே. 4,5) அமலில் இருக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!