ரயில் பயணிகள் கவனத்திற்கு – ‘இதை’ மீறினால் சிறை தண்டனை! IRCTC முக்கிய அறிவிப்பு!

0
ரயில் பயணிகள் கவனத்திற்கு - 'இதை' மீறினால் சிறை தண்டனை! IRCTC முக்கிய அறிவிப்பு!
ரயில் பயணிகள் கவனத்திற்கு - 'இதை' மீறினால் சிறை தண்டனை! IRCTC முக்கிய அறிவிப்பு!
ரயில் பயணிகள் கவனத்திற்கு – ‘இதை’ மீறினால் சிறை தண்டனை! IRCTC முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் ரயில்களில் பயணிப்பவர்கள் குறிப்பிட்ட சில விதிகளை மீறினால் அபராதத்துடன் கூடிய சிறை தண்டனையை அனுபவிக்க கூடும் என்று இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிறை தண்டனை

இந்தியாவில் உள்ள மக்களால் அதிகளவு விரும்பப்படும் ஒரு பொது போக்குவரத்து என்றால் அது ரயில் பயணங்கள் தான். ஏனென்றால் இந்த ரயில் பயணங்கள், குறைந்த செலவில் நாம் விரும்பிய இடங்களுக்கு பாதுகாப்பாக செல்லும் வசதியை வழங்குவதால் பலரும் இந்த சேவையை விரும்புவது உண்டு. அந்த வகையில் ஒவ்வொரு நாளும், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் இந்த ரயில் பயணங்களை மேற்கொள்கின்றனர். இப்போது, ரயில்களில் பயணிக்க வேண்டும் என்றால் அதற்கு சில வழிகாட்டுதல்களையும், விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகும்.

Exams Daily Mobile App Download

இல்லையெனில் பயணிகள் சிறை தண்டனையை அனுபவிக்கும் வாய்ப்புகளையும் பெறக்கூடும் என்று இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) எச்சரித்துள்ளது. அதாவது, ரயிலில் பயணம் செய்யும் போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் அது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். அந்த வகையில் ரயிலில் தீயை உருவாக்குவது அல்லது எரியக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 164ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு, சிறை தண்டனை கிடைப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

தீவிரமடையும் குரங்கு அம்மை பாதிப்பு – 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு!

எனவே, பயணிகள் ரயில்களில் பயணங்களை மேற்கொள்ளும் போது மண்ணெண்ணெய், காய்ந்த புல், அடுப்பு, பெட்ரோல், கேஸ் சிலிண்டர், தீப்பெட்டி, பட்டாசு ஆகியவற்றை கொண்டு செல்லக்கூடாது. மேலும், ரயில் நடைமேடைகளில் புகை பிடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ள குற்றமாகும். இதை மீறுபவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.1000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. அதனால், ரயில் பயணிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும்படி IRCTC கேட்டுக்கொண்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!