ரயில் பயணிகளின் கவனத்திற்கு – 4 சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே முடிவு!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பின் தற்போது ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் தாம்பரம் செல்லும் ரயில்கள் உள்பட 4 ரயில்களை மேலும் நீட்டிக்க இருப்பதாக தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
தெற்கு ரயில்வே அறிவிப்பு:
கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தால் பல ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது நிலைமை சரியானதை அடுத்து பல இடங்களுக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தென்காசி வழியாக தமிழ் புத்தாண்டு முதல் கோடைகால சிறப்பு ரயில்கள் 3 மாதத்திற்கு புதிதாக தொடங்கப்பட்டன. அதன்படி நெல்லையில் இருந்து தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களுக்கு தென்காசி வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
தமிழகத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!
இந்த ரயில்கள் பொதுமக்களுக்கு அதிகம் பயனுள்ளதாக இருந்தது. மேலும் நெல்லையில் இருந்து தென்காசி வழியாக பழனி, பொள்ளாச்சிக்கு முதன்முறையாக ரயில் இயக்கப்பட்டதால் பயணிகளுக்கு அது மிகவும் வசதியாக இருந்தது. அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம் பயணிகள் சென்னை தாம்பரம் செல்ல இது மிகவும் வசதியாக இருந்தது. ஆனால் இந்த ரயில் கட்டணங்கள் வழக்கமாக வசூலிக்கப்படும் தட்கல் கட்டணத்தை விட 13 மடங்கு அதிகமாக இருந்தாலும் வசதியாக இருப்பதால் மக்கள் அதிகம் வருகின்றனர்.
அதனால் இந்த ரயில்கள் மூலமாக அதிகம் வருமானம் கிடைக்கின்றன. அது மட்டுமில்லாமல் அம்பை, தென்காசி, ராஜபாளையம் வழித்தடத்தின் வழியாக சென்னை மற்றும் கோவை மேட்டுப்பாளையத்திற்கு தினசரி ரயில்கள் இயக்கிட வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் கோடைகாலம் முடிந்ததை அடுத்து கடந்த ஜூன் மாத இறுதியில் நிறுத்தப்பட்ட நெல்லை – தாம்பரம், நெல்லை – மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ரயில்களை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்ய தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
தன்படி தாம்பரம் – எர்ணாகுளம், தாம்பரம் – நாகர்கோவில், நெல்லை – தாம்பரம், நெல்லை – மேட்டுப்பாளையம் ஆகிய 4 ரயில்களை 3 மாதங்களுக்கு நீட்டித்திட ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில் ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த 4 ரயில்களும் மீண்டும் 3 மாத காலத்திற்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில்கள் கால நீட்டிப்பு மட்டும் செய்யப்படாமல் நிரந்திரமாக இயக்க தெற்கு ரயில்வே முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.