TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – நல்ல மதிப்பெண் பெற எளிய வழிமுறைகள் இதோ!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - நல்ல மதிப்பெண் பெற எளிய வழிமுறைகள் இதோ!
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - நல்ல மதிப்பெண் பெற எளிய வழிமுறைகள் இதோ!
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – நல்ல மதிப்பெண் பெற எளிய வழிமுறைகள் இதோ!

TNPSC குரூப் 4 & VAO தேர்வு வரும் ஜூலை மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தேர்வுக்கு எவ்வாறு தயாராகுவது எவ்வாறு என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

குரூப் 4 & VAO :

தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களுக்கான 2022 ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டு குரூப் 4 & VAO தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பபதிவுகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த வருடம் குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வை எழுத 10ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே போதுமானது. தேர்வுக்கான பாடத்திட்டமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வானது ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது.

Exams Daily Mobile App Download

எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு இரண்டாம் பகுதி பொது அறிவு பதில் ஆகும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுப்பது அவசியம் 75-பொது அறிவு வினாக்களும், 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். இந்த பொது அறிவு பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறி வினாக்கள் போன்ற பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.

தினமும் 4 மணி நேரம் தமிழ் பகுதிக்கு ஒதுக்கி படித்தால் எளிதாக தமிழ் மொழித்தேர்வின் வெற்றி பெறலாம். இதில் 95 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்து படிப்பது நல்லது. தேர்வுக்கான நாட்கள் குறைவாக இருப்பதால், தமிழ் புத்தகங்களை படிக்கும் போது, குறிப்பு எடுத்து படியுங்கள். 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளியுங்கள். இவ்விரு புத்தகங்களில் இருந்து அதிகப்படியான வினாக்கள் கேட்கப்படும். 12 ஆம் வகுப்பு புத்தகங்களை முழுமையாக படிக்க தேவையில்லை. சிலபஸூக்கு ஏற்ற பகுதிகளை மட்டும் படியுங்கள்.

TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணத்தில்!

தமிழுக்கு அடுத்தபடியாக நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது கணித பாடம் தான் விகிதம், இலாபம்-நட்டம், அளவீடுகள், சதவீதம், வட்டி கணக்குகள், இயற்கணிதம் போன்ற பகுதிகளில் இருந்து தான் அதிக வினாக்கள் கேட்கப்படுகின்றன. இதற்கு 6-10 வரையிலான பள்ளி பாடப்புத்தகங்களை படித்தாலே போதுமானது. . தமிழ் மற்றும் கணித பகுதி நமக்கு அதிக மதிப்பெண்களை பெற்று தரக்கூடியவை என்பதால், இவற்றிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுங்கள்.அடுத்தப்படியாக நடப்பு நிகழ்வுகளுக்கு செய்தித்தாள்களை படிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!