TNPSC Group 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம், தேர்வு முறை குறித்த விவரம் இதோ!
தமிழகத்தில் TNPSC குரூப் 4 & VAO தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வு நெருங்கி விட்டதை அடுத்து தேர்வு முறை, பாடத்திட்டம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
குரூப் 4 & VAO:
தமிழக அரசுத் துறையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தமிழ்நாடு நீதி அமைச்சு பணி, தமிழ்நாடு தலைமைச் செயலக பணி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலக பணி தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மற்றும் சார்நிலை பணி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஆகிய பணியிடங்களுக்கு குரூப் 4 & VAO தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா தாக்கத்தால் இந்த குரூப் 4 தேர்வு நடைபெறவில்லை. நடப்பாண்டு கொரோனா பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கை நோக்கி திரும்பி வரும் நிலையில் அரசு போட்டித் தேர்வுகளை நடத்த தேர்வாணையம் முடிவு செய்தது.
Exams Daily Mobile App Download
கடந்த மார்ச் மாதம் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பில் 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஜூலை 24 ம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு, இரண்டாம் பகுதி பொது அறிவு பகுதி இது பழைய பாடத்திட்டத்தை ஒத்துத்துள்ளது. புதிதாக யூனிட் 8 (தமிழ்நாடு மரபு, பண்பாடு, இலக்கியம்) மற்றும் யூனிட் 9 (தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம்) ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 99% பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிப்பு – அமைச்சர் எச்சரிக்கை தகவல்!
பொது அறிவு பகுதியில் 75-பொது அறிவு வினாக்களும், 25- திறனறி வினாக்களும் இடம் பெறும். நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம் ஆகிய தலைப்புகளில் வினாக்கள் வரும். தேர்வர்கள் 180 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிக்க வேண்டும். தமிழ் மொழிப் பாடப் பகுதியைப் பொறுத்தவரை, பத்தாம் வகுப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்படும் , 6 முதல் 10 வகுப்பு வரையிலான பள்ளி பாட புத்தகங்களை படித்து வைத்து கொள்ள வேண்டும். மேலும் 11 மற்றும் 12 வகுப்பு தமிழ் புத்தகங்களையும் படித்துக் கொள்ளலாம். மேலும் நடப்பு நிகழ்வுகளுக்கு (Current Affairs) தேர்வு அறிவிப்புக்கு முன் ஆறு மாதம் முதல் 1 வருடம் வரையிலான செய்திகளை படிக்க வேண்டும்.