TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – பதவி வாரியாக காலிப்பணியிடங்கள்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. தற்போது இத்தேர்வு மூலமாக நியமிக்கப்பட உள்ள பணியிடங்கள் குறித்த விவரங்கள் மற்றும் அப்பணியிடத்தில் காலியாக உள்ள இடங்களையும் பற்றி விரிவாக பார்ப்போம்.
காலிப்பணியிடங்கள்
தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வின் மூலமாக நியமிக்கப்படுகிறார்கள். அத்துடன் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலமாக குரூப் 1, குரூப் 2, 2ஏ மற்றும் குரூப் 4 தேர்வு உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதில் குரூப் 1 தேர்வு மூலமாக தமிழகத்தின் உச்ச அதிகாரப்பணிகளான துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அத்துடன் குரூப் 2, 2ஏ தேர்வு மூலமாக சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதே போன்று கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. இத்தேர்வு ஒரே ஒரு நிலை கொண்ட தேர்வு என்பதாலும் 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதாலும் இத்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். இதில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) – 274, இளநிலை உதவியாளர் – 3,681, பில் கலெக்டர் – 50, தட்டச்சர் – 2,108, சுருக்கெழுத்து தட்டச்சர் – 1,024, ஸ்டோர் கீப்பர் – 1, வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் – 163 உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வுக்கு தமிழகத்தில் 21 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.