TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC தேர்வாணையம் தற்போது குரூப் 1 தேர்வு குறித்தான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், குரூப் 1 தேர்விற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 22 தான் கடைசி நாள் என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, 2A, குரூப் 4 முதலான தகுதி தேர்வினை நடத்தி அதன் மூலம் தகுதியான பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில் குரூப் 2 தேர்வு கடந்த மே 21 ஆம் தேதி நடத்தப்பட்டது மற்றும் குரூப் 4 தேர்வு வரும் ஜூலை 24 ஆம் தேதியன்று நடைபெற இருக்கிறது. இந்நிலையில், குரூப் 1 தேர்வு குறித்தான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 92 காலிப் பணியிடங்களுக்காக குரூப் 1 தேர்வு நடைபெற இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதில், துணை ஆட்சியர் பணிக்கு 18 காலிப் பணியிடமும், துணை காவல் கண்காணிப்பாளர் பணிக்கு 26 காலிப் பணியிடமும், துணை பதிவாளர் பணிக்கு 13 காலிப் பணியிடமும், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர் பணிக்கு 7 காலிப் பணியிடமும், மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலர் பணிக்கு 3 காலிப் பணியிடமும் என மொத்தமாக 92 காலிப் பணியிடங்கள் உள்ளன. மேலும், குரூப் 1 தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://tnpsc.gov.in என்கிற இணையதள முகவரி மூலமாக வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி விவகாரத்தை தொடர்ந்து 2வது மாடியிலிருந்து குதித்த மாணவி – அதிர்ச்சியில் மக்கள்!
மேலும், விண்ணப்பத்தினை திருத்தம் செய்ய நினைப்பவர்கள் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 29 ஆம் தேதிக்குள் திருத்தம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குரூப் 1 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு வரும் அக்டோபர் 30 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதன்மை தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.