TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டங்கள் குறித்த முழு விவரம் இதோ!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் இத்தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் இந்த தேர்வுக்கு எப்படி தயாராவது என்பது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காண்போம்.
TET தேர்வு
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் TET தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் ஆகும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அரசுப்பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்தப்படுவார்கள். மேலும், இந்த தகுதித்தேர்வானது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். அந்த வகையில் இரண்டு தாள்களாக நடத்தப்படும் இத்தேர்வின் முதல் தாளை டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்களும், இரண்டாம் தாளை பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி படித்தவர்களும் எழுதுவார்கள்.
Exams Daily Mobile App Download
இதில் முதல் தாள் எழுதுவதற்கு 12ம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) முடித்திருக்க வேண்டும். தவிர இரண்டாம் தாள் எழுதுவதற்கு இளங்கலை பட்டப்படிப்புடன் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) அல்லது B.Ed இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதில் முதல் தாள் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல், மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், சுற்றுச்சூழல் கல்வி ஆகியவற்றில் இருந்து 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். தேர்வு நடைபெறும் காலம் 3 மணி நேரம் ஆகும்.
Post Office இல் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ரூ.5000 வரை வருமானம் தரும் சேமிப்பு திட்டம்!
குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தலில் 6 முதல் 11 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் குறித்த கேள்விகள் கேட்கப்படும். மொழிப்பாடப் பிரிவில் சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள், கணிதத்தில் சிக்கல் தீர்க்கும் திறன்கள் ஆகிய பிரிவில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இதுவே 2ம் தாளை பொறுத்தமட்டில் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல், மொழிப்பாடம், ஆங்கிலம் மற்றும் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் இருந்து 50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். தேர்வு நடைபெறும் காலம் 3 மணி நேரம் ஆகும்.
இப்போது டெட் தேர்வுக்கு தயாராகுபவர்கள் 6 முதல் 12 வரையுள்ள பள்ளிப் பாடப்புத்தகங்களை படிக்க வேண்டும். தவிர, 2ம் தாள் எழுதுபவர்கள் கூடுதலாக தங்களது பிரிவில் உள்ள பாடங்களையும் படித்து வேண்டும். தமிழ் பாடங்களுக்கு இலக்கணம், செய்யுள், உரைநடை ஆகியவையும், ஆங்கிலத்திற்கு இலக்கணம் சார்ந்த வினாக்கள், கணிதம் மற்றும் அறிவியல் பிரிவில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடங்கள், சமூக அறிவியலுக்கு 11 மற்றும் 12ம் வகுப்பு பாடங்களை படிக்க வேண்டும். இதனுடன் உளவியல் பாடங்களிலும் அதிக கவனம் செலுத்தினால் தேர்வில் வெற்றி பெறலாம்.