தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – அரசு எச்சரிக்கை அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி நலனிலும், ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகளிலும் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இது குறித்து அரசு முதன்மைச் செயலாளர் பள்ளி இயக்குநர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மாணவர்களுக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் கல்வியை தாண்டி நல்லொழுக்கத்திலும் அவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் அரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது மாணவர்களுக்கு நற்பண்புகளை வளர்க்கும் விதமாக போதனை வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக பாட நேர கால அட்டவணையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பாடங்களோடு சேர்த்து போதனை வகுப்பும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாணவர்களின் தவறுகளை திருத்தி கொள்ள வாய்ப்பு வழங்குமாறு அரசு பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. நேற்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
இதில் பள்ளி மாணவர்களுக்கான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து அரசு முதன்மைச் செயலாளர் பள்ளிக்கல்வி ஆணையர், தொடக்கக் கல்வி இயக்குநர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் ஒரு குழந்தை சரியாக படிக்கவில்லை என்றால் முதலில் மாணவரின் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அதில் கற்றலில் குறைபாடு இருக்கும் குழந்தை என அடையாளம் காணப்பட்டால் தலைமையாசிரியர் அக்குழந்தையின் கல்விக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். மேலும் கற்றலில் குறைபாடில்லாத குழந்தைகள் என்றால் பள்ளியின் மூலமாக குழந்தைக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி – 2வது வெற்றியை பதிவு செய்த இந்தியா
மேலும் குழந்தைக்கு தவறை திருத்தி கொள்ள ஒரு மணி நேரம் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக தவறை ஏன் செய்தேன் என்று எழுத்து பூர்வமாக எழுத வைக்க வேண்டும். அதனை தொடர்ந்து மூன்றாவது எச்சரிக்கை விடுக்க வேண்டும். அதிலும் குழந்தை தனது தவறை உணரவில்லை என்றால் நான்காவதாக அருகில் இருக்கும் காவல் நிலையத்திலிருந்து குழந்தை நேய காவல் அதிகாரி மூலம் அறிவுரை வழங்க வேண்டும். இறுதியாக 5வது முறையில் தவறாக நடந்து கொண்டால் சுற்றுச்சூழலின் மாற்றமும் நட்பு வட்டாரமும் குழந்தையை மாற்றும் என்பதால் அருகில் உள்ள அரசு பள்ளிக்கு மாற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.