தமிழக ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – புதிய நடவடிக்கை!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது இது தொடர்பாக உணவுத்துறை அதிகாரி ஒருவர் ரேஷன் கடைகளில் வரவிருக்கும் மாற்றங்கள் பற்றி கூறியுள்ளார்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள்
தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் இலவசமாக அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை 70 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பெறுவதில்லை என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் இலவச அரிசியை பெற்று விட்டதாக கூறி ரேஷன் ஊழியர்கள் கள்ளச்சந்தை விற்று வருகின்றனர். இந்த அரிசிகள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு சென்று பாலிஷ் செய்யப்படுகிறது.
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி வீட்டில் இருந்தபடியே அப்டேட் செய்யலாம்!
அதன்பிறகு மீண்டும் தமிழகத்திற்கு வந்து ஆந்திரா பொன்னி, கர்நாடகா பொன்னி என கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் இதனை தடுக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தோல்வியிலேயே முடிவடைகிறது. மேலும் தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் கார் வைத்திருப்பவர்கள், குளிர்சாதன வசதி வைத்திருப்பவர்கள் தொடங்கி, வருமான வரி செலுத்துபவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், அரசுப்பணியில் இருப்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதில்லை.
அத்துடன் அவர்களின் ரேஷன் கார்டும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து தமிழகத்திலும் இது போன்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழக உணவுத்துறையில் உயர் அதிகாரி கூறியிருப்பதாவது, தமிழகத்தில் அரசு ஊழியர்கள், வசதி படைத்தவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், பெரும் விவசாயிகள் உள்ளிட்டவர்கள் ரேஷன் தொடர்பான சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம் ஆனால் இவர்களுக்கு இலவச ரேஷன் அரிசி வழங்குவதை தடை செய்ய வேண்டும். இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அரிசி கடத்தல் செய்யப்படுவது தடுக்கப்படும். இது தொடர்பாக அரசு ஆலோசனை மேற்கொண்டு விரைவில் அறிவிப்பை வெளியிடும் என்று தெரிவித்துள்ளார்.