தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – அக்டோபர் 10ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்!

0
தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - அக்டோபர் 10ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்!
தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - அக்டோபர் 10ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்!
தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – அக்டோபர் 10ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கிடையே கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளதால் தமிழக முதல்வர் எண்ணும் & எழுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதையடுத்து தற்போது இந்த திட்டத்திற்காக ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள உள்ளனர். அதனால் இந்த மாணவர்களுக்கு அக்டோபர் 10ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அரசு பள்ளிகள்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. இதனால் மாணவர்களுக்கிடையே கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 2020ம் ஆண்டு 1ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் கொரோனா விடுமுறை காரணமாக 2ம் வகுப்பு படிக்காமலேயே நேரடியாக 3ம் வகுப்பிற்குள் நுழைந்துள்ளனர். இதனால் குழந்தைகளிடையே அதிகரித்துள்ள கற்றல் இழப்பை பள்ளிகள் சரி செய்வதற்காக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதையடுத்து நடப்பு கல்வியாண்டில் பல்வேறு நலத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் தமிழகத்தில் 1 முதல் 3ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் “எண்ணும் எழுத்தும்” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இத்திட்டத்தின் முதன்மையான நோக்கம் தமிழகத்தில் 2025ம் ஆண்டுக்குள் 8 வயதிற்குட்பட்ட அனைவரும் எண்ணறிவும் எழுத்தறிவு பெற வேண்டும் என்பதாகும். மேலும் மாணவர்கள் 8 வயதிற்குள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும் அடிப்படைக் கணிதச்செயல்பாடுகளைச் செய்யும் திறன்களையும் பெறுவதற்காகவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக மாற்றுத்திறனாளர்களுக்கு உதவித்தொகை – உயர்நீதிமன்றத்தின் உத்தரவு!

Exams Daily Mobile App Download

மேலும் இத்திட்டம் மாணவர்களின் பங்கேற்பை அதிகப்படுத்துவதற்காகவும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு வருகிற அக்டோபர் 6 முதல் 8 வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி நடத்தப்படும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிந்த பிறகு அக்டோபர் 6ம் தேதி வழக்கம் போல பள்ளிகள் செயல்படும் என கூறப்பட்ட நிலையில் தற்போது அக்டோபர் 10ம் தேதி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!