தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டிற்கான வகுப்புகள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் சிலம்பாட்ட விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
சிலம்பாட்ட பயிற்சி:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகத் தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது ஓரளவுக்கு கொரோனா குறைந்துள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொதுத் தேர்வும் நடத்தப்பட்டது. மேலும், ஆன்லைன் வகுப்பு முடிந்ததிலிருந்து பள்ளி மாணவர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் சிரமப்பட்டு வருவதால், சனிக்கிழமை விடுமுறை அளிக்க கூறி ஆசிரியர்கள் தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – விரைவில் வரவிருக்கும் அதிரடி மாற்றம்!
ஆனாலும் அனைத்து சனிக்கிழமையும் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. பொதுத்தேர்வுகள் முடிவடைந்து மே 13ம் தேதி முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளி மாணவர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலமாகத்தான் இரண்டு ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்திய காரணத்தினால் மாணவர்களுக்கு கல்வி திறன் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
Exams Daily Mobile App Download
அடுத்த கல்வி ஆண்டில் இருந்து மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அழிந்து வரும் கலைகளில் ஒன்றான சிலம்பாட்ட விளையாட்டை அரசு பள்ளிகளில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை மட்டுமே பள்ளியில் சேர்க்க வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால் மாஸ்க் அணிந்து பள்ளிக்கு வர வேண்டுமா என்பது குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.