தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – விரைவில் வரவிருக்கும் அதிரடி மாற்றம்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - விரைவில் வரவிருக்கும் அதிரடி மாற்றம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - விரைவில் வரவிருக்கும் அதிரடி மாற்றம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – விரைவில் வரவிருக்கும் அதிரடி மாற்றம்!

தமிழகத்தில் ரேஷன் அட்டை மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் நியாய விலைக் கடைகளில் இணையதளம் மூலம் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதிரடி மாற்றம்:

தமிழகத்தில், பொது வினியோகத் திட்டத்தின் கீழ், ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி இலவசமாகவும், சமையல் எண்ணெய், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரிசி அட்டைதாரர்கள் மிகவும் பயன் அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் இருந்து இலவச உணவு பொருட்களும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

மேலும் ரேஷன் கடைகளுக்கு வரும் பொது மக்களை அலைக்கழிக்கக் கூடாது என்றும், கைரேகைப் பதிவு வேலை செய்யவில்லை என்றால் கூட, அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் தாமதம் செய்யக் கூடாது என்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மேலும் ரேஷன் கடைகள் குறித்த புது புது அறிவிப்புகள் அடிக்கடி வெளியேறிக் கொண்டே இருக்கிறது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல்? சுகாதாரத்துறை செயலாளரின் முக்கிய உத்தரவு!

இந்நிலையில் ரேஷன் கடைகளில் இணையதளம் மூலம் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளை பொது தரவு அலுவலமாக மாற்றி, பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக அரசின் கூட்டுறவு துறை, பொது தரவு அலுவலக மாற்றத்திற்கு வாய்ப்பிருக்கிறதா என்பதை ஆராய்ந்து அறிக்கை அளிக்க அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இதனால் ரேஷன் கடைகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதாலும், தொலைதூரப் பகுதிகளில் உள்ள ஊர்களுக்கும் டிஜிட்டல் சேவையினை கொண்டு செல்லவும் கூட்டுறவுத்துறை இந்த புதிய முயற்சியில் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!