தமிழக அரசு ஊழியர்களின் கவனத்திற்கு – பென்ஷன் திட்டத்திற்கான புதிய அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு என்று வழங்கப்படும் ஓய்வூதிய திட்டத்தில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
நீதிமன்ற உத்தரவு:
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தனுஷ்கோடி என்பவர் ஆரணியில் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் 1975 ஆம் ஆண்டு தனது முதல் மனைவி உயிரோடு இருந்த போது அவருடைய தங்கையை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இது அவருடைய முதல் மனைவிக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் அவர் பணி ஓய்வு பெற்று அவருக்கு பென்சன் வழங்கப்பட்டு வந்தது.
ரயில் பயணம் மேற்கொள்வோர் கவனத்திற்கு – சிறப்பு ரயில்கள் அறிமுகம்!
இந்நிலையில் தனுஷ்கோடி கடந்த 2010 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அதனால் அவருடைய பென்சன் வாங்குவது குறித்து பிரச்சனை எழுந்தது. அதன் பின் தனக்கு பென்சன் வழங்க வேண்டும் என சொல்லி தனுஷ்கோடியின் 2வது மனைவி சாந்தி விண்ணப்பித்தார். ஆனால் அக்கவுண்டன்ட் ஜெனரல் நிராகரித்து உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து தனக்கு பென்சன் வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
Exams Daily Mobile App Download
இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி எஸ்எம் சுப்ரமணியம் விசாரித்து உத்தரவிட்டுள்ளார். அதில் 2வது மனைவிக்கு பென்ஷன் வழங்க மறுக்கப்பட்டது சரி தான் என அவர் தெரிவித்துள்ளார். முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது பென்ஷன்தாரர் 1975ல் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அரசு ஊழியராக இருந்து கொண்டு சட்டவிரோதமாக திருமணம் செய்தது குற்றம். அதனால் இந்த திருமணம் செல்லாது. பென்ஷன் விதிகளின்படி, குடும்ப பென்ஷன் வழங்கும் கேள்வியே இருக்காது என அவர் தெரிவித்துள்ளார். பென்ஷன் விதிகளின்படி 2வது மனைவிக்கு குடும்ப பென்ஷன் மறுத்ததில் தவறு எதுவும் இல்லை என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.