தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை நாட்கள் குறைக்கப்பட்டு வரும், 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை எண்ணும் , எழுத்தும் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் கலந்து கொள்ளும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை
தமிழகத்தில் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா பாதிப்பால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்தி வந்தனர். மாணவர்களுக்கு அதிகமான விடுமுறை விடப்பட்டதால் சனிக்கிழமைகளில் கூட பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்களை நடத்தி வந்தனர். இதனால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் அதிக மன அழுத்தம் ஏற்பட்டது.
Exams Daily Mobile App Download
மாணவர்களுக்கு முழுமையாக பாடங்களை முடிக்காத காரணத்தால் நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என அறிவித்திருந்தது. மேலும், வழக்கத்துக்கு மாறாக இந்த வருடம் மே மாதத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டது. 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே மாதம் 13ஆம் தேதி இறுதி தேர்வு முடிக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டது. இதனால் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு மே மாதம் 14ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
Flipkart நிறுவனத்தில் HR Partner ஆக பணிபுரிய வாய்ப்பு – விண்ணப்பிக்க விரையுங்கள்..!
இந்நிலையில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளி ஆசிரியர்களுக்கு, கோடை விடுமுறை 5 ம் தேதியுடன் முடிவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை பள்ளிக்கல்வி துறை நடத்தும் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் பங்கேற்கும் படி ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் சுதன் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்புக்கு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பள்ளி திறந்த பின் பயிற்சி வகுப்பை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து உள்ளனர்.