தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை!

0
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் கவனத்திற்கு - பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை!
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் கவனத்திற்கு - பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை!
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை!

கோவை மாவட்டத்தில் பொதுத் தேர்வில் பங்கேற்காத 4,765 மாணவர்களின் நிலையை அறிந்து, உடனடியாக அவர்களை துணைத் தேர்வில் பங்கேற்க வைக்கும் பணி தொடங்கியுள்ளது. ஐந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என நியமித்து பணிகள் நடைபெற்று வருகிறது.

பொதுத்தேர்வு:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இந்த நேரத்திலும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சிகள் மூலமாக தினசரி வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அரசு நோய்த் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டியது. கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடி செய்யப்பட்டு படிப்படியாக பள்ளிகள் மீண்டும் திறக்க ஆரம்பித்தது. நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.

Exams Daily Mobile App Download

வகுப்பு வாரியாக தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. மாணவர்களின் பாட சுமையை கருத்தில் கொண்டு பாடத்திட்டம் குறைக்கப்பட்டு கடந்த மாதம் 5ம் தேதி 12ம் வகுப்பிற்கும் 10ம் வகுப்பிற்கு மே 6ம் தேதியும் தேர்வு தொடங்கப்பட்டது. தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளதை அடுத்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடந்து முடிந்த இந்த பொதுத்தேர்வில் 10,11,12 ஆகிய வகுப்புகளில் சுமார் 6,49,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. அதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 4,765 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவில்லை என்ற தகவல் வந்துள்ளது.

தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை அறிவிப்பு!

அம்மாவட்டத்தில் 1,15,000 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத பதிவு செய்ததில் 4,765 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. கோவை மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலும் இது போன்று மாணவர்கள் அப்சென்ட் ஆகியுள்ளனார். அம்மாணவர்களை கண்டறிந்து, அவர்கள் பொதுத் தேர்வில் பங்கேற்க வைக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவையில் பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களை கண்டறிந்து ஒரு மாதம் பயிற்சி அளித்து, உடனடி பொதுத் தேர்வில் பங்கேற்க செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!