அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – இனி சனிக்கிழமைதோறும் வகுப்புகள்!
கர்நாடகா மாநிலத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் இனி சனிக்கிழமைகள் தோறும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை வகுப்புகள்
இந்தியாவில், இந்த ஆண்டு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் கர்நாடகா மாநிலத்திலும் கடந்த ஒரு சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட ஏழு நாட்களுக்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், இப்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் சனிக்கிழமைகளில் முழு நாள் வகுப்புகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டை விட்டு வெளியேறிய பாக்கியா, தடுக்க நினைக்கும் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!
அதாவது, கனமழை காரணமாக இழந்த வகுப்பு நேரத்தை ஈடுகட்டும் வகையில் அடுத்து வரும் 6 சனிக்கிழமைகளில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்ட காலங்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டிருந்த கல்லூரிகளுக்கும் இதே விதி பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும் வேலை நாட்களில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று பொது பயிற்றுவிப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மற்ற கல்வி ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கர்நாடகா மாநிலத்தில் இந்த கல்வி ஆண்டு 15 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கியுள்ளது. அந்த வகையில், வழக்கமாக ஜூன் 1ம் தேதி பள்ளிகள் தொடங்கும் வேளையில் இந்த ஆண்டு மே மாதம் இரண்டாவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது. எனவே, இந்த ஒரு வார இழப்பு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது. இருப்பினும், இழந்த படிப்பு நேரத்தை ஈடுசெய்ய வார இறுதி நாட்களில் வகுப்புகளை ஏற்பாடு செய்யுமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நாசமபோக