வீட்டை விட்டு வெளியேறிய பாக்கியா, தடுக்க நினைக்கும் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!

0
வீட்டை விட்டு வெளியேறிய பாக்கியா, தடுக்க நினைக்கும் குடும்பத்தினர் - இன்றைய எபிசோட்!
வீட்டை விட்டு வெளியேறிய பாக்கியா, தடுக்க நினைக்கும் குடும்பத்தினர் - இன்றைய எபிசோட்!
வீட்டை விட்டு வெளியேறிய பாக்கியா, தடுக்க நினைக்கும் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி அவமானப்படுத்திய போதும் பாக்கியா எல்லாத்தையும் பொறுத்து கொண்டு இருந்ததை பற்றி சொல்கிறார். பின் ஈஸ்வரி கோபியை மன்னிப்பு கேட்க சொல்ல ஆனால் பாக்கியா அதெல்லாம் தேவை இல்லை என வீட்டை விட்டு வெளியேறி செல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் நாகரிகமா எனக்கு பேச தெரியவில்லை சாப்பிட தெரியவில்லை என எல்லாத்துக்கும் குற்றம் கண்டுபிடிப்பீர்களே இப்போ நீங்க செய்து இருப்பது நாகரிகமான விஷயமா என பாக்கியா கேட்கிறார். நீங்க வரும் போது காபி போட்டு வைக்கணும் ட்ரெஸ் அயன் பண்ணி வைக்கணும் மூணு வேலையும் சாப்பாடு செய்து வைக்கணும் இதெல்லாம் என் மனசார தான் செய்தேன். ஆனால் இத்தனை வருசமாக நானும் பிடிக்காமல் மெஷின் வாழ்க்கையை வாழ்கிறேன் என இன்னைக்கு கண்டிப்பாக சொல்ல வேண்டும் என சொல்கிறார்.

அன்னைக்கு கேட்டீங்களே கல்யாணம் பிடிக்கவில்லை என சொல்லி இருப்பியா என உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்க சொல்லி இருக்கலாமே என கேட்கிறார். எல்லாத்தையும் சகித்து கொண்டு எல்லா தியாகத்தையும் செய்துவிட்டு இனிமேலும் நான் முட்டாளாக இருக்கமாட்டேன் என சொல்லி வருத்தப்படுகிறார். அன்னைக்கு நான் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் போது எழில் செழியன் எனக்கு ஆறுதலகா இருந்தாலும் நீங்க இல்லாமல் நான் தேடினேன். ஆனால் அப்போ கூட ராதிகாவுக்கு தெரிய கூடாது என நடித்து இருக்கீங்க என சொல்கிறார்

TN Job “FB  Group” Join Now

என்ன இருந்தாலும் நாம 3 பிள்ளைகளை பெற்று இருக்கிறோம் ஆனால் என்னை பார்க்க வர உங்களுக்கு தோன்றவில்லை என கேட்கிறார். இதற்கு மேல் நான் ஏன் வாழ வேண்டும் என பாக்கியா கேட்கிறார்.அப்போது ஈஸ்வரி விடு பாக்கியா இவன் உன்னை விட்டு போய்டுவானா அதை எல்லாம் நாங்க பார்த்துக் கொண்டு சும்மா இருப்போமா என கேட்கிறார். பின் எழில் அம்மா நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் உன்னுடன் இருப்பேன் என சொல்ல, தாத்தா கோபியை வெளியே போக சொல்கிறார். ஆனால் ஈஸ்வரி நடந்தது நடந்துவிட்டது கோபி பாக்கியாவிடம் மன்னிப்பு கேளு என சொல்கிறார்.

பின் தாத்தா அவன் சின்ன பையன் இல்லை தெரிந்து தான் எல்லாம் செய்திருக்கான் என சொல்ல ஈஸ்வரி நீங்க சும்மா இருங்க இதை இப்படியே விட்டு விடுங்கள் என சொல்ல எழில் அப்பா செய்தது சரியா அம்மா இப்படி செய்தால் ஒப்புக் கொள்வீர்களா என கேட்கிறார். அப்போது ஈஸ்வரி பாக்கியா அப்படி எல்லாம் செய்யவே மாட்டார் ஆனால் நல்ல வேளை கோர்ட் போவதற்கு முன்னதாக எல்லாம் தெரிந்துவிட்டது. கோபி பாக்கியாவிடம் மன்னிப்பு கேளு என்னுடன் கோவிலுக்கு வந்து சத்தியம் கேட்பேன் செய்ய வேண்டும் என சொல்கிறார்.

உடனே எழில் மன்னிப்பு கேட்டால் அம்மாவிற்கு செய்தது சரியாகிவிடுமா என கேட்க ஈஸ்வரி எழிலை சும்மா இருக்க சொல்கிறார். பின் செழியன் என்ன அப்பா இதெல்லாம் உங்களை எப்படி எல்லாம் நம்பினேன் என கேட்கிறார். ஈஸ்வரி நான் உயிரோட இருக்கும் வரை உன்னை இப்படியே விடமாட்டேன் என சொல்ல, பாக்கியா இவர் சொன்னது எல்லாம் எப்படி மறக்க முடியும் என கேட்கிறார். பின் பாக்கியா என்ன நடந்தாலும் கடைசியில் நான் பொறுத்து போக வேண்டும். என் சந்தோசம் தேவை இல்லை நான் நினைப்பது தேவை இல்லை என் விருப்பங்களை விட்டு கொடுத்து குடும்பத்திற்காக இருக்க வேண்டும்.

ஆனால் இந்த குடும்பத்தில் எல்லாரும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தான் இருந்தேன் ஆனால் அது இல்லை என ஆனா பின்னால் நான் ஏன் இங்கே இருக்க வேண்டும் என பாக்கியா கேட்கிறார். அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இந்த மனைவி என்கிற உறவு இவரால் வந்தது தான அது எனக்கு வேண்டாம் என சொல்கிறார். இந்த முடிவு நான் எடுத்தது இல்லை இவர் எடுத்தது தான என சொல்கிறார். செழியன் அவர் செய்தது பெரிய தப்பு தான் ஆனால் இந்த முடிவு வேண்டாம், என சொல்கிறார். பின் எழில் நான் உன் உடன் வருகிறேன் என சொல்கிறார்.

TN TET தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான வழிமுறைகள் – தேர்வாணையம் அறிவிப்பு!

பாக்கியா யார் சொல்வதையும் கேட்காமல் கோபியிடம் வந்து எத்தனை தடவை என்னை பிடிக்கவில்லை என சொல்லி இருக்கீங்க அதற்கு நான் என்ன செய்ய விட்டு போய்டவா என கேட்ட போது ஆமாம் என நினைத்து கொண்டு தான் இருந்து இருக்கீங்க, என் மேலே சின்ன அக்கறை அன்பு இருக்கும் என நினைத்தேன். ஆனால் இன்று எல்லாம் தெரிந்துவிட்டது என சொல்லி இனிமேல் நான் இங்கே இருக்கமாட்டேன் என சொல்லி வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.

எழில் செழியன் ஜெனி இனியா செல்வி என அனைவரும் பின்னாடி வந்து தடுக்க ஆனால் பாக்கியாவை தடுக்க முடியவில்லை. எழில் பாக்கியா பின்னால் செல்ல செல்வி அவர் பின்னாடி போகிறார்கள், இனியா அம்மா போகாதே என சொல்லி அழுது கொண்டே இருக்க ஈஸ்வரியும் தாத்தாவும் கூட பாக்கியாவை நினைத்து அழுகிறார். ஆனால் பாக்கியா வேகமாக நடந்து கொண்டே செல்கிறார்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!