SSC தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசில் உள்ள துறைகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள காலிபணியிடங்களை நிரப்புவதற்கான ஹவல்தார் நிலை-1 தேர்வு வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் துவங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தேர்வு மையம் குறித்தான முக்கிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது
SSC தேர்வு:
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் காலியாக உள்ள பணியாளர் மற்றும் ஹவல்தார் நிலை I தேர்வு வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. தென் பிராந்தியத்திலும் பணியாளர் மற்றும் ஹவல்தார் நிலை I தேர்விற்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து 34 ஆயிரத்து 969 பேர் விண்ணப்பித்துள்ளனர். கணினி வழியாகவே தேர்வு நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமே சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்விற்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் பணியாளர் மற்றும் ஹவல்தார் நிலை I தேர்விற்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு!
தென் பிராந்தியத்தில் வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரைக்கும், பிறகு 11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரைக்கும், பின்னர் ஜூலை 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரைக்கும் ஆகிய 14 நாட்கள் தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் ஒரு நாள் ஒன்றுக்கு மட்டுமே மூன்று ஷிப்ட்களாக தேர்வு நடைபெறுகிறது. முதல் ஷிப்ட் காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும், இரண்டாவது ஷிப்ட் பிற்பகல் 1 மணி முதல் பிற்பகல் 2. 30 மணி வரையிலும், மூன்றாவது ஷிப்ட் மாலை 5 மணி முதல் 6.30 மணி வரையிலும் தேர்வு நடைபெறும். மேலும் இந்த தேர்விற்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் மின்னணு அனுமதி சான்றிதழை தேர்வாணையத்தின் இணையதளத்தின் மூலமாக தேர்வு தொடங்கும் 4 நாட்களுக்கு முன்பு இருந்து தேர்வு முடிவடையும் நாள் வரைக்கும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தேர்வு மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கும், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசியல் கட்டமைப்புகள், சட்ட ரீதியான அமைப்புகள், நடுவர் மன்றங்கள் போன்றவற்றில் உள்ள வருவாய்த் துறையின் கீழ் உள்ள மத்திய கலால் வாரியம் மற்றும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகியவற்றில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காகவும் இந்த போட்டித் தேர்வு நடைபெற இருக்கிறது.