தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், கள்ளர் சீரமைப்பு, சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு உதவும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விடுதிகளில் தங்கி படிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த விடுதிகளில் தங்கி படிக்க தகுதியான மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மாணவர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு மாணவர்களிடையே இடைநிற்றலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், கள்ளர் சீரமைப்பு, சிறுபான்மையினர் உள்ளிட்ட மாணவ, மாணவிகளுக்கு உதவு புரியும் நோக்கத்தோடு பள்ளி விடுதிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இதற்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ளார் .
ரேஷன் கார்டுகளை ஆதார் அட்டையுடன் இணைக்க ஜூன் 30 கடைசி நாள் – மத்திய அரசு அறிவிப்பு!
இவர் அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, மாவட்டத்தில் பள்ளி விடுதிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ உள்ளிட்ட படிப்புகளில் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் பெற்றோர் அல்லது குடும்பத்தினரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர்கள் இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையம் குறைந்தபட்சமாக 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பத்தை விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பள்ளி விடுதிகளுக்கு வருகிற 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதே போல் கல்லூரி விடுதிகளுக்கு 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதில் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளும் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.