பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – நிதி நெருக்கடி காரணமாக விடுமுறை! அரசு அதிரடி!
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், அந்நாட்டு அரசு வேறு வழியின்றி சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதாவது பள்ளிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு விடுமுறை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்:
இலங்கை நீண்ட காலமாக பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காத அவல நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். மேலும் பணவீக்கம் தினம் தினம் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 15 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. மேலும் உலகின் பல்வேறு நாடுகளிடம் இருந்து இலங்கை உதவிகளைக் கோரி உள்ள போதிலும், இந்தியா மட்டுமே இலங்கைக்கு உதவி வருவதாக ரணில் விக்ரமசிங்க வேதனை தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளதுடன் அது கிடைக்கவும் இல்லை. இதனால் வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் பெற நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல் இல்லாததால் ரோட்டில் வாகனங்களே இல்லாமல் நெருக்கடி இல்லாமல் காட்சியளிக்கிறது. 1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. மிகவும் அவசியமான எரிபொருள் இறக்குமதிக்குக் கூட அந்நிய செலாவணி இல்லாமல், அதை ரெடி செய்ய இலங்கை போராடி வருகிறது.
தமிழக உயர் அதிகாரிகளின் முக்கிய கவனத்திற்கு – சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு!
தற்போது இலங்கையிடம் இருக்கும் பெட்ரோல்- டீசல் இருப்பு இன்னும் சில நாட்களில் தீர்ந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வார தொடக்கத்தில், எரிபொருளைச் சேமிக்கும் முயற்சியில், வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நேற்று முதல் இரண்டு வாரங்களுக்கு அனைத்துப் பள்ளிகளும் மூடப்படும் என்றும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மின்சாரம் கிடைத்தால் ஆன்லைன் கற்பித்தலை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.