SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – எச்சரிக்கை பதிவு!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதற்காக எச்சரிக்கை பதிவுகளை வெளியிட்டு வருகிறது. அதாவது, வாடிக்கையாளர்கள் செய்யும் சின்ன தவறால் வங்கிக் கணக்கில் உள்ள பணம் அனைத்தும் காணாமல் போய்விடும் என்று எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
எச்சரிக்கை பதிவு:
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வங்கி வாடிக்கையாளர்கள் யாரும் தங்களுடைய ஓடிபி நம்பரை யாரிடமும் பகிர வேண்டாம் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எச்சரித்துள்ளது. OTP என்பது வங்கி விஷயத்தில் மிக முக்கியமான ஒன்று. பணம் அனுப்புவது போன்ற பரிவர்த்தனைகளுக்கு OTP நம்பர் மூலமாகவே உறுதிப்படுத்தும் ஒப்புதல் வழங்கப்படுகிறது. வங்கிக் கணக்கு உள்ள வாடிக்கையாளர் தங்களது கணக்கிலிருந்து யாருக்காவது பணம் அனுப்பும்போது கூட இந்த OTP கேட்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இந்த OTP நம்பர் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு வங்கி தரப்பிலிருந்து அனுப்பப்படுகிறது. இதை அந்த வாடிக்கையாளர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றவரிடம் இதைத் தெரிவிக்கக்கூடாது. இதை மிகவும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ட்விட் செய்து உள்ளது. அதில் வாடிக்கையாளர்களுக்கு வங்கி அனுப்பும் எந்தச் செய்தியும் “எப்போதும் “SBI/SB” என்று தொடங்கும் சுருக்குக்குறியீடு மட்டுமே, எ.கா: SBIBNK, SBIINB, SBIPSG, SBYONO” இப்படி இருக்கும் என்று SBI குறிப்பிட்டுள்ளது.
SBI பிரதிநிதிகள் எவரும் வாடிக்கையாளர்களிடமிருந்து பின் குறியீடு அல்லது OTP எண்கள் போன்ற ரகசியத் தகவல்களைக் கேட்க மாட்டார்கள் என்றும் வங்கி எச்சரிக்கிறது. அதன் வங்கி இணையதளத்தில், பொதுக் கடன் வழங்குபவர் கூறியது, “எஸ்பிஐ ஒருபோதும் வாடிக்கையாளர்களிடமிருந்து பின் மற்றும் ஓடிபி போன்ற ரகசியத் தகவல்களைக் கேட்பதில்லை. அத்தகைய எந்த அழைப்பையும் ஒரு மோசடி செய்பவர் செய்யலாம். எனவே தயவு செய்து தகவல்களை பகிர வேண்டாம்” என தெரிவித்துள்ளார். மேலும்,முன்பை விட அதிகமான வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வங்கிக்கு செல்வதால் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருகிறது என குறிப்பிட்டுள்ளது.