ரயில் பயணிகள் கவனத்திற்கு – பிளாட்ஃபார்ம் டிக்கெட் ரூ.10 இல் இருந்து ரூ.50 ஆக உயர்வு!
இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் தற்போது ஏராளமானோர் அத்தியாவசிய தேவையின்றி அவசர கால சங்கிலியை இழுப்பதாக புகார்கள் வந்துள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது இது தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பயணிகள் கவனத்திற்கு:
இந்தியாவில் அனைத்து பொது போக்குவரத்தை விட மிகவும் குறைந்த விலையில் வேகமாகவும் பயணிக்கும் வகையில் ரயில் போக்குவரத்து விளங்குகிறது. அதனால் பெரும்பாலும் பொதுமக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்ளவே விருப்பம் கொள்கின்றனர். அத்துடன் பயணிகள் தங்கள் அலுவலகம், இருப்பிடம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் ரயிலின் மூலம் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவசர கால சங்கிலியை தேவையில்லாமல் ஏராளமான பயணிகள் இழுப்பதாக புகார்கள் பெறப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அத்துடன் மும்பை பிரிவில் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரை 332 சங்கிலி இழுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 53 வழக்குகள் மட்டுமே அத்தியாவசிய தேவைக்காக இழுக்கப்பட்டுள்ளது. இதில் 279 வழக்குகள் பயணிகள் தாமதமாக வருவதற்கு அல்லது கீழே இறங்கி ஸ்டேஷனை விட்டு வெளியேறுவதற்காக இழுக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை கட்டுப்படுத்த ரயில் நிலையங்களில் தேவையற்ற நபர்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காக ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
TNPSC – Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு.!
அதன்படி குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டுகளின் விலை ரூ.10 லிருந்து ரூ.50 ஆக உயர்த்தப்படுவதாக இந்தியன் ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு மே 9 முதல் மே 23ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், தாதர், லோகமான்ய திலக் டெர்மினஸ், தானே, கல்யாண் மற்றும் பன்வெல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. மேலும் தேவையற்ற காரணங்களுக்காக சங்கிலியை இழுத்த நபர்களிடமிருந்து 94,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.