தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கவனத்திற்கு – கட்டண நிர்ணய குழு முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கவனத்திற்கு - கட்டண நிர்ணய குழு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கவனத்திற்கு - கட்டண நிர்ணய குழு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கவனத்திற்கு – கட்டண நிர்ணய குழு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 2 ஆயிரத்து 523 தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து கட்டண நிர்ணய குழு முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா தொற்றால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்தது. இந்நிலையில், நோய் தொற்றால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஆன்லைன் முறையில் தான் வகுப்புகள் நடைபெற்று வந்தது. முன்னதாக கடந்த கல்வியாண்டில் தனியார் பள்ளிகள், கொரோனா ஊரடங்கால் வருமானம் பாதிப்பு இல்லாத அரசு ஊழியர்களிடம் 85 சதவீத கட்டணமும், வருவாய் இழந்து தவித்த பெற்றோர்களிடம் 75 சதவீத கட்டணத்தையும் 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Exams Daily Mobile App Download

மேலும் கட்டணம் செலுத்த இயலாத பெற்றோர்கள் கூடுதல் கட்டண சலுகை கோரி பள்ளிகளை அணுகும் பட்சத்தில் அதனை தனியார் பள்ளிகள் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்படவில்லை என்பதை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும், தனியார் பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட பள்ளியில் படிப்பை தொடர விரும்பாவிட்டால் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் தமிழகத்தில் திமுக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

ஹோட்டல் அறை வாடகைக்கு இனி ஜிஎஸ்டி வரி விலக்கு – கவுன்சில் அதிகாரிகள் ஒப்புதல்!

இதனால் கடந்த பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் , தேர்வுகள் நடைபெற்றது. இதையடுத்து 2022- 2023 கல்வி ஆண்டிற்கான வகுப்புகளும் பள்ளிகளில் தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் வருடம் தோறும் தனியார் பள்ளிகளுக்கு, அரசால் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் 2 ஆயிரத்து 523 தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என கட்டண நிர்ணய குழு தெரிவித்துள்ளது. இதை 400 தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாகவும், ஆகஸ்ட் மாதத்திற்குள் எஞ்சியுள்ள பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயம் செய்யும் புதிய கட்டணம் 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!