Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
பெண் குழந்தைகளின் படிப்பு செலவு அல்லது திருமணத்திற்காக சேமிக்க விரும்பும் பெற்றோர்கள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் இணைந்து பயன் பெறலாம். இந்த திட்டத்தில் சேர விரும்புவர்களுக்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
செல்வமகள் சேமிப்பு திட்டம்:
இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் உருவாக்கப்பட்ட பெண்களுக்கான சிறந்த திட்டம் தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். பெண் குழந்தைகளின் உயர் கல்வி மற்றும் திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். பெண் குழந்தைகளுக்கு 10 வயது பூர்த்தியாகியிருந்தாலே அந்த குழந்தைகளின் பெயரிலேயே பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் குறைந்தபட்சமான தொகையாக ரூ.250 செலுத்தி கணக்கு தொடங்கலாம். குறைந்தபட்ச தொகையாக ரூ.250லிருந்து அதிகபட்சமாக ரூ.1,50,000 வரைக்கும் செலுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.
Exams Daily Mobile App Download
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மொத்தமாக 15 ஆண்டுகள் பணம் செலுத்தினால் போதுமானது. வாடிக்கையாளர் செலுத்தும் பணத்திற்கு 7.6 சதவிகிதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு துவங்கிய நாளில் இருந்து 21 வருடத்திற்குள் அந்த கணக்கு முதிர்ச்சியடைந்துவிடும். இந்த திட்டத்தில் இணைந்த பெண்ணிற்கு 18 வயது ஆகும் போது இதுவரை செலுத்திய மொத்த தொகையிலிருந்து 50% பணத்தை அந்த பெண்ணின் படிப்பு செலவுக்காகவோ அல்லது திருமணத்திற்காகவோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
எல்லை சாலைகள் அமைப்பில் அருமையான வேலை – 876 காலிப்பணியிடங்கள்..!
செல்வமகள் சேமிப்பு திட்டம் முதிர்ச்சியடைவதற்கு முன்பாகவே பெண்ணிற்கு திருமணம் முடிந்துவிட்டாலும், கணக்கை எந்தவித வட்டி இழப்புமின்றி முடித்து கொள்ளலாம். விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்தான விவரங்களை அறிய விரும்பினால் விருதுநகர் – 04562-243232, சிவகாசி – 04562- 220150, அருப்புக்கோட்டை – 04566 – 220503, இராஜபாளையம் – 04563- 222240 என்கிற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.