முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு – TRB முக்கிய அறிவிப்பு!
முதுநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தமிழ் வழி படித்ததற்கான சான்றிதழ்களை ஆக.27-ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
TRB முக்கிய அறிவிப்பு:
முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்று உள்ளதாக தெரிவித்துள்ள விண்ணப்பதாரர்கள் அதற்குரிய ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்கவில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இருந்தாலும், கடைசி வாய்ப்பாக ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் தமிழ் வழியில் பயின்றதற்கான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது..இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு நேரடி நியமனத்துக்கான கணினி வழித் தேர்வுகள் கடந்த பிப்.12 முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவுகள் ஜூலை 4ம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, முதுநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் சிலர், தமிழ் வழியில் படித்ததற்கான கல்வித்தகுதி ஆவணங்களை விண்ணப்பிக்கும்போது முறையாக பதிவேற்றம் செய்யவில்லை. இதையடுத்து தமிழ் வழி படித்ததற்கான ஆவணங்களை ஆக.22 முதல் 25-ம் தேதி வரை இணையதளத்தில் பதிவேற்ற வாய்ப்பு அளிக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க சாவடிகள் அகற்றம்? ஒன்றிய அரசு அதிரடி!
தற்போது தொழில்நுட்ப காரணங்களால் சான்றிதழ்களை (ஆக.24) முதல் 27-ம் தேதி வரை பதிவேற்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், 1ம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு 11-12ம் வகுப்பு, டிப்ளமோ படிப்பு, இளங்கலைப் பட்டம் (UG Degree), முதுகலைப் பட்டம் (PG Degree) கல்வியியல் இளங்கலைப் பட்டம் (B.Ed. Degree) மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலை (B.Ed. Degree மற்றும் MPEd. Degree) என தாங்கள் தமிழ் வழியில் பயின்றதற்கான அனைத்து ஆவணங்களையும் உரிய அலுவலரின் ஒப்புதல் பெற்று அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு உரிய படிவத்தில் பெற்று சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் விண்ணப்பத்தில் ஏற்கனவே, தமிழ் வழி ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை ‘ஆம்’ என பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இவ்வாய்ப்பு வழங்கப்படும். எனவே, மனுதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் உள்ள இவ்விவரத்தினை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு, செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்