PNB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்!
இந்தியாவில் முன்னணி பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இனி ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்.
ஏடிஎம் கார்டு:
நாட்டின் வங்கி மற்றும் நிதி அமைப்பு செயல்பாடுகளை மத்திய ரிசர்வ் வங்கி கவனித்து வருகிறது. நாட்டின் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்கி வருகிறது. இந்த ரிசர்வ் வங்கி அவ்வவ்போது வங்கிகளின் விதிமுறைகளையும் பண பரிவர்த்தனை முறைகளையும் மாற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது 2022ம் ஆண்டு முதல் ஏடிஎம் பண பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்தியது. அதன்படி ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம் 20 ரூபாயிலிருந்து 21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாதத்தில் 5 முறைக்கு மேல் ஏடிஎம் கார்டு மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!
கடந்த வருடம் பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பெரும்பாலும் இணையதளம் வாயிலாகவே வங்கி சேவைகளை வழங்கியது. இந்த நிலையில் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்களில் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தவிர, விர்ச்சுவல் டெபிட் கார்டையும் இவ்வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அத்தனை தொடர்ந்து 128ஆவது நிறுவன தினத்தையொட்டி, பஞ்சாப் நேஷனல் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான வங்கி பரிவர்த்தனைகளை செயல்படுத்த ’PNB One’ மொபைல் செயலியில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – 3ம் திருப்புதல் தேர்வு துவக்கம்!
ஏற்கனவே சில வங்கிகளில் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வசதியின் கீழ் வாடிக்கையாளர் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறாரோ அதே வங்கியின் ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்கலாம் . மற்ற வங்கிகளை தொடர்ந்து தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியும் இந்த வசதியை கொண்டு வந்துள்ளது. இனி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டை மறந்து விட்டு வெளியில் சென்றால் கூட கவலையில்லை.