PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் தொகையை தெரிந்துகொள்ளும் வழிமுறைகள்!
இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்கி வருகிறது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு PF கணக்கின் கீழ் ஓய்வூதியம் சேமித்து வைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்த கணக்கில் உள்ள தொகைக்கான வட்டி விகிதத்தை எப்படி ஆன்லைன் மூலமாக பார்ப்பது என்று பார்ப்போம்.
PF கணக்கு
இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முதலில் அரசு ஊழியர்களின் பெயரில் PF கணக்கு தொடங்கப்பட வேண்டும். இந்த PF கணக்கின் கீழ் அரசு ஊழியர்களின் மாத தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து சேமிக்கப்படுகிறது. இந்த தொகையில் அரசு சார்பாக மேலும் கூடுதல் தொகை செலுத்தப்பட்டு அவர்களின் பணிக்காலம் நிறைவடையும்போது அவர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் 69% இடஒதுக்கீடு – அமைச்சர் அறிவிப்பு!
இந்த தொகைக்கு ஆண்டுதோறும் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி இதற்கான வட்டி விகிதம் கடந்த 2020-21ம் ஆண்டில் 8.5 சதவீதமாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது 2021-22ம் ஆண்டிற்கான வட்டி விகிதத்தை 8.1 என்று குறைத்துள்ளது. மேலும் 40 ஆண்டுகளுக்கு பிறகு மிகவும் குறைந்தபட்ச வட்டி விகிதம் இது தான் என்று கூறப்படுகிறது. இதையடுத்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது தனது ஊழியர்களுக்கு வட்டியை மட்டும் PF கணக்கில் வரவு வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலமாக PF கணக்கில் உள்ள வட்டித்தொகையை பார்ப்பதற்கான வழிமுறைகள்:
1. இதற்கு முதலில் https://epfindia.gov.in என்ற இணையதளத்தில் சென்று உங்களது UAN எண், கடவுச்சொல் உள்ளிட்டு அடுத்ததாக கேப்சா குறியீடை சரியாக கொடுக்க வேண்டும்
2. இப்போது தோன்றும் பக்கத்தில் இ-பாஸ்புக் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
3. உங்களின் அனைத்து தகவலும் சரியாக நிரப்பப்பட்டிருந்தால் புதிய பக்கம் திரையில் தோன்றும்
4. அங்கு மெம்பர் ஐடி என்று கொடுக்கப்பட்டிருக்கும். அதைத் திறந்தால், உங்களது வருங்கால வைப்பு நிதியில் இருக்கும் தொகையை நீங்கள் பார்த்து கொள்ளலாம்.