தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் 69% இடஒதுக்கீடு – அமைச்சர் அறிவிப்பு!
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது, அனைத்து கல்லூரிகளிலும் இடஒதுக்கீடு முறை எப்படி பின்பற்றப்பட வேண்டும் என்பது குறித்து தமிழக முதல்வர் கூறியிருக்கிறார். இடஒதுக்கீடு முறை சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஒரு குழுவையும் நியமித்திருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
69% இடஒதுக்கீடு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து முழுமையாக நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக 10-ம் வகுப்புக்கு 39%, 11, 12-ம் வகுப்புகளுக்கு 35%, 1-9-க்கு வகுப்புகளுக்கு 50% பாடங்கள் குறைக்கப்பட்டு இருந்தன குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில நாட்களில் நடப்பாண்டிற்கான கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அனைத்து கல்லூரிகளுக்கு உத்தரவு ஒன்றை கூறியுள்ளார்.
DNA டெஸ்டில் பாரதிக்கு தெரிய வரும் உண்மை? சீரியலில் நிகழ இருக்கும் அடுத்த திருப்பம்!
அதாவது பல்கலைக்கழகங்களில் 69% இடஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் அனைத்து கல்லூரிகளிலும் முழு பாடங்கள் நடத்த வேண்டும். பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளிலும் முழுபாடங்களையும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் 69% இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அமைச்சர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில் மதுரை காமராஜர் பல்கலை. மாணவர் சேர்க்கையிலும் 69% இடஒதுக்கீடு முறையை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
மதிப்பெண் அடிப்படையில் 31% இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் மற்றும் கல்லுரிகளில் மாணவர் சேர்க்கை மட்டுமின்றி வேலைவாய்ப்பிலும் 69% இட ஒதுக்கீடு பின்பற்ற தமிழக அரசு உறுதி அளித்துள்ளது மேலும் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற தனி குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார். இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். மேலும் கல்லூரிகளில் 100 சதவீத பாடங்கள் நடத்தப்படும் என்றும் கூறினார்.