LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – மானியத்தொகை குறித்த முழு விபரங்கள் இதோ!
இந்தியாவில் சிலிண்டருக்கான மானியத்தொகை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. ஆனால் கொரோனா காரணமாக 2020 மே மாதம் மானியத்தொகை வழங்கப்படுவது ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்த மானியத்தொகை சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பான தகவல்களை பார்ப்போம்.
கேஸ் சிலிண்டர்
இந்தியாவில் அனைத்து வீடுகளிலும் சிலிண்டர் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அரசு சார்பாக மானியத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சிலிண்டருக்கான மானியத் தொகை தற்போது வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் வாடிக்கையாளர்கள் மொத்த தொகையும் செலுத்தி எரிவாயு சிலிண்டரை வாங்க வேண்டும். இதற்கு முன்பாக வாடிக்கையாளர்கள் மணியத்தொகையை தவிர்த்து சிலிண்டருக்கு மட்டும் கட்டணம் செலுத்தி எரிவாயு சிலிண்டர் வாங்கி வந்தனர்.
Exams Daily Mobile App Download
மேலும் மானியத்தொகையை எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசே செலுத்தி வந்தது. கொரோனா கால கட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தது. இதையடுத்து சிலிண்டரின் விலையும் அதிகரித்தது. அத்துடன் சிலிண்டரின் விலையை ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானக்கிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் புதிய உச்சத்தை தொட்டது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
Reliance Jioவின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் – 3 OTT தளங்களுடன் சூப்பர் அறிவிப்பு!
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிவை கண்டது. அதனால் மத்திய அரசு வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தொகையை கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் நிறுத்தி வைத்தது. தற்போது 10 லட்சம் ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு மானியத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இதில் பல பேருக்கு கிடைப்பதில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் உஜ்வாலா திட்டத்தின் கிழ் சிலிண்டர் இணைப்பு வாங்கியவர்களுக்கு மானியத்தொகை வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு குறிப்பிட்ட சில பேருக்கு மட்டுமே மானியத்தொகை வழங்கப்படுவதால் அரசுக்கு குறைந்த அளவில் செலவு ஏற்படுகிறது.