திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானம் முக்கிய அறிவுறுத்தல்!
திருப்பதி கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும். அதிலும், தற்போது பள்ளி, கல்லூரிகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் திருப்பதி கோயிலில் கூட்டம் அதிக அளவு கூடியுள்ளது. இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
திருப்பதி தரிசனம்:
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆன்மிக வழிபாட்டு தலங்கள் அனைத்திலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் அச்சம் நீங்கி உள்ளதால் நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதிலும், கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
Exams Daily Mobile App Download
வழக்கமாக வைகுண்ட ஏகாதசி மற்றும் கருடசேவை நாள்களில்தான் திருப்பதி கோயிலுக்கு அதிக பக்தர்கள் வருவார்கள். ஆனால் கடந்த 2 நாட்களாக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். கிட்டத்தட்ட 48 மணி நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. பொதுவாக ஒரு நாளில் 75,000 பக்தர்கள் மணிக்கு 4,500 பேர் என்ற வீதத்தில் தரிசனம் செய்வார்கள். தற்போது 1 நாளில் லட்சக்கணக்கானவர்கள் வருவதால் தரிசனம் செய்ய மிகவும் தாமதம் ஏற்படுகிறது.
தமிழகத்தில் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது – யுஜிசி திடீர் அறிவிப்பு! மாணவர்கள் குழப்பம்!
தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் போன்றவற்றை நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது.மே 28ம் தேதி நிலவரப்படி மட்டும், 89,318 பேர் தரிசனம் செய்துள்ளனர். இவர்களில் 48,539 பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 3.76 கோடி ரூபாய் உண்டியல் வசூல் ஆகியுள்ளது. அதிக கூட்ட நெரிசல் இருப்பதால் கோயில் தரிசனத்திற்கு வரும் வி.ஐ.பி பக்தர்கள் மற்றும் சாதாரண பக்தர்கள் சரியா திட்டமிட்டுக் கொள்ளும் படி தேவஸ்தானம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.