தமிழகத்தில் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது – யுஜிசி திடீர் அறிவிப்பு! மாணவர்கள் குழப்பம்!

0
தமிழகத்தில் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது – யுஜிசி திடீர் அறிவிப்பு! மாணவர்கள் குழப்பம்!
தமிழகத்தில் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது – யுஜிசி திடீர் அறிவிப்பு! மாணவர்கள் குழப்பம்!
தமிழகத்தில் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது – யுஜிசி திடீர் அறிவிப்பு! மாணவர்கள் குழப்பம்!

தமிழகத்தில் தற்போது அரசிடம் அங்கீகாரம் பெறாத பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பு எப்போதிலிருந்து செயல்பாட்டிற்கு வரும் என்பதனை எதிர்பார்த்து மாணவர்கள் காத்து இருக்கின்றனர்.

தொலைதூர பட்டப்படிப்புகள்

தமிழகத்தில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ‘எல்லோருக்கும் கல்வி எப்போதும் கல்வி’ என்ற நோக்கத்துடன் தொலைதூர படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களில் தொலைதூர படிப்புகள் நடத்தி வருகின்றன. அத்துடன் தமிழகத்தில் 4 அரசு பல்கலைக்கழகங்களில் மட்டுமே தொலைதூர படிப்புகளை நடத்த பல்கலைமானியகுழு அதாவது யுஜிசி அனுமதி அளித்துள்ளது.

Exams Daily Mobile App Download

அத்துடன் அங்கீகாரம் பெறாத‌ கல்வி நிறுவனங்களில் அனுமதி பெறாத‌ படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு எந்தவொரு சலுகையும் கிடைப்பதில்லை என்று யுஜிசி ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த 1997ம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகம் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சேலத்தில் தொடங்கப்பட்டது. இதையடுத்து 2001ம் ஆண்டு 96 பாடப்பிரிவுகளுடன் தொலைதூரக் கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களிலும் மற்றும் பிற மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் மையங்களிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

தமிழகத்தில் 4 நாட்கள் மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த நிலையில் வெளி மாநிலங்களில் மேலும் கூடுதலான மையங்கள் தொடங்கியதாக புகார் எழுந்தது. அதனால் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் 2014-15ம் ஆண்டு மாணவர் சேர்க்கையை யுஜிசி ரத்து செய்தது. இந்த நிலையில் தற்போது இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக யுஜிசிக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால் மாணவர்கள் யாரும் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூர படிப்புகளில் சேர வேண்டாம் என்றும் இதில் சேர்ந்து படித்தால் பட்டப்படிப்பு செல்லாது என்றும் யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பெரியார் பல்கலைக்கழகம் முன் அனுமதியின்றி தொலைதூர கல்வி வழங்குவதாகவும், இது தொடர்பாக அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!